-->

தமிழீழ காவல்த்துறை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1991 கார்த்திகை 9ம் நாள்
தமிழீழ மக்களின்
நலன்களைப்
பேணுவதை மட்டுமே நோக்கமாக
வரித்துக்கொண்டு
தோற்றுவிக்கப்பட்ட
~ தமிழீழ காவற்துறை~யினது
செயற்பாடுகள்
அதிகாரபூர்வமாக தமிழீழத்
தேசியத் தலைவர் வே .
பிரபாகரன் அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவரால்
தோற்றுவிக்கப்பட்ட இக்
காவல்துறை , அவரின் நேரடிப்
பொறுப்பின் கீழ்
செயல்படுகிறது .
இக்காவற்துறையின்
செயற்பாடுகள்
பற்றி தமிழீழத் தேசியத்
தலைவர் அவர்கள் கருத்துத்
தெரிவிக்கும்
போது 'தமிழீழக்
காவற்துறையினர்
நல்லொழுக்கம் , நேர்மை,
கண்ணியம்,
கட்டுப்பாடு போன்ற சீரிய
பண்புடையவர்களாக
இருப்பார்கள் .
பொது மக்களுக்குச்
சேவை செய்யும்
மனப்பாங்குடன்
சமூகநீதிக்கும் சமூக
மேம்பாட்டுக்கும்
உழைக்கும் மக்கள்
தொண்டர்களாகவும்
கடமையாற்றுவார்கள்.
எமது பண்பாட்டிற்கு ஏற்ற
வகையில்
மக்களொடு அன்புடனும்
பண்புடனும் பழகுவார்கள் .
சமூக விரோத குற்றச்
செயல்கள் எவற்றுடனும்
சம்பந்தப்படாதவர்களாகவும்
தேசப்பற்று
மிகுந்தவர்களாகவும் 24
மணி நேரமும்
பணியாற்றுவார்கள். தமிழீழ
காவற்துறையைப்
பொறுத்தவரை குற்றங்கள்
நடந்து முடிந்தபின்
குற்றவாளியைத்
தேடிப்பிடித்து கூட்டில்
நிறுத்துவது அதன்
நோக்கமல்ல. குற்றங்கள்
நிகழாதவாறு தடுத்துக்
குற்றச் செயல்களற்ற
ஒரு சமூகத்தைக்
கட்டி எழுப்புவதே அதன்
இலட்சியமாகும் " என்றார்.
குறிப்பு சிங்கள
காவற்துறையினரால்
யாழ் .பொது நூலகம்
எரித்துச்
சாம்பலாக்கப்பட்ட
நினைவு நாளான ஆனி 1ம் நாள்
தமிழீழ காவற்துறையினர்
தமது பயிற்சிகளைத்
தொடங்கினர் என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது .


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner