-->

கரும்புலிகளின் வரலாறும் , வாழ்க்கையும்

'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில்
தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில்
லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.
இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர்
தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற
செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது .
வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ
நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக
வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப்
படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக
நடத்தி முடிக்கப்பட்டது.
நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர்
தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள்
மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.
கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர்
சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத்
தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன் . அதன் பின்னரே இந்தியாவுடன்
பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர்
ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர்
ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத்
தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல்
இருந்த ஜே .ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர்
வெற்றி கண்டான்.
இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட
வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன்
முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்"
என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில்
எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.
இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால்
தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய
வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும்
கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின்
தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார் . தேசிய விடுதலைப் போராட்டத்தில்
மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின்
களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக்
10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.
இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார்.
இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல்
1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத்
தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.
18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக
அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில்
சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும்
மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில்
ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம்
இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத்
தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.
இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -
கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள்
உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது.
இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.
ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால்
ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1
தொட

நாமும் நிமிர்வோம் தமிழனாக ! !

நாமும் நிமிர்வோம்
தமிழனாக..!
எங்களின் நூலகம்
எரித்தவர் ஏற்றினர்
சிங்கள இனமதன்
சிறுமைத் தனமதை !
கல்வியில் உயர்ந்த
கண்ணியம் நிறைந்த
நற்றமிழ் இனமதை
நாசப் படுத்தவே
தென் திசையிருந்து
வந்த வானரர்
கொடுஞ்செயல் புரிந்தனர் !
பச்சைக் கட்சியின்
மகாவலி அமைச்சராய்
இருந்த காமினி
இழிநிலை செயலதைத்
தலைமையேற்றவன்
தரப்பார் நடத்தியே
கொடுமை புரிந்தனன் !
அறிவின் வறுமையில்
ஆடிய சிங்களம்
அரியதோர் சுரங்கமாய்
திகழ்ந்த நூலகத்தை
தீயிட்டுக் கொளுத்தியே
திமிர்தனம் புரிந்தனர் !
தென் னாசியாவிலே
புகழ் பெற்ற நூலகம்
தீயிலே சாய்ந்ததை
செவி வழி அறிந்த
டேவிட் அடிகளார்
உயிர்தனை துறந்தே
உயிரற்ற உடலமாய்
தரையிலே சாய்ந்தார் !
கல்வியில் செழித்த
இனமொன்றின் மீது
கட்டாயத் தடைகளை
இட்ட போதிலும்
தரப்படுத்தலை
ஏற்றிய போதிலும்
தமிழனின் ஆற்றலை
முடக்கிட முடியாது
சிரமதிலேறிய சினமது
பின்னர் விசராக்கிய
வெறியினில் நின்று
ஆடிய சிங்களம் இன்று
அடிமேல் அடி வாங்கியே
அவமானப் பட்டு
நிற்பதைக் காண்கிறோம் !
அவமானப்பட்டு நின்றால்
போதுமா (?)
அவலத்தைத் தந்தவரக்கு
அவலத்தைக் கொடுப்போம்
அண்ணன் போட்டுள்ள
அரியதோர் கணக்கு
தமிழராய் பிறந்திட்ட
அனைவருக்குமே
கணக்கை சரியாய்க்
கழித்திடும் பங்குண்டு !
தாய் நிலத்தினில் வாழ்பவர்
தம்மையே கொடுக்கிறார்
புலத்திலே வாழும்
நாமென்ன கொடுக்கலாம்
கூனிக் குறுகிக்
குனிந்து நெளிந்து
வாழ்கின்ற வாழ்விலே
யாதென்ன கண்டோம் !
அச்சமற்ற வாழ்வொன்று
முன்னைய நாட்களில்
இருந்தது உண்மை
இன்றைய நாட்களில்
இங்கும் மெதுவாய்
இனவாதம் வளருது
என்று வெடிக்குமோ
எப்படி வெடிக்குமோ
யாரறிவாரோ
புலம் பெயர் உறவே
எங்களை அவர்கள்
அடித்துக் கலைக்குமுன்
நாங்களாகப் போய்விடல்
நன்றிலும் நன்றே !
நாங்களங்கு
போகும் போதிலே
நிமிர்ந்து போகும்
நிலையொன்று வேண்டும்
நிலையொன்றைக் காண
எம் நாடங்கு வேண்டும்
நாடுகாத்திடும்
பங்கினைச்செய்தே
நாமும் நிமிர்வோம்
தமிழனாக !
கல்வியைப் பறித்தார்
நூலகம் எரித்தார்
தமிழினம் போற்றும்
தன்மானம் தன்னை
எரிக்கவும் அழிக்கவும்
இவர்களால் முடியுமா !
இழிநிலையோடு
வாழ்ந்திடும் நிலையை
இவ்வுலகினில் தமிழன்
தாங்கிடல் முறையோ !

தமிழீழ பாடல் வரிகள் { 1 }


{1}
தமிழா! நீ பேசுவது தமிழா

அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்
அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை
இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா நம் தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரெண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா?'
பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸிடிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா





{2}
நெஞ்சம் மறக்குமா
நெஞ்சம் மறக்குமா
நெஞ்சம் மறக்குமா

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார் -(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே





{3}
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

தமிழீழ பாடல் வரிகள் { 2 }



{1}
தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்
சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா
போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்
புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்
நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்
ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்
அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்
உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த
ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்
அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே
பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்
போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்
மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி
மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு





{2}
மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
மானம் ஒன்றே

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா

மானம் ஒன்றே

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்
எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

மானம் ஒன்றே

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக..

மானம் ஒன்றே

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன்.... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

மானம் ஒன்றே





{3}
நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா
நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] )
அடர்ந்த காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா )
உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா )

[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்
தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்]
கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் )
நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்

[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்
உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்]
நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் )
புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்

[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்
புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்]
நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் )
அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்

[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி]
அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் )
எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்

தமிழீழ பாடல் வரிகள் { 3 }



{1}
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
வேங்கை கடல் வீரர் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
இன்னல் இனி மேலும் இல்லை
புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
பூமி தனிலேது தொல்லை
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தம்பி
எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
பகையை முடிப்பானே பொங்கி
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்
வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)





{2}
பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)

இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)

விடுதலைபுலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)





{3}
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்
என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்
இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்
புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை
பூவாய் வளர்கிறோம்
கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை
ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்
காலம் வரையும் தோள்களில்
இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)
இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே
மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே
உறவினை வளர்ப்பார்கள்
இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி
எரிந்திட போவார்கள்
பாட்டும் கூத்தும் பகிடியுமாக
பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)
பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்
ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்
எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்
இந்த வேளையும் பகைவர் மிதினில்
எரியும் விருப்பினில் இருப்பார்கள்
அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்
முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)
வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்
எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

தமிழீழ பாடல் வரிகள் { 4 }


{1}
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்{2}
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்(
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள்- சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்





{2}
கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்
எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்
மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்
இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்
காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்
காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை
நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்
காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்
ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்






{3}
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது )
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது )
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் )
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் )
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் )
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் )

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ






{4}
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ..

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ....

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்
தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2
விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்
[எரிமலையாய் நாம் எழுவோம்
விடுதலைக்காய் தலை தருவோம்] 2
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
ஆஆஆஆ.....

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்
புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்

தமிழீழ பாடல் வரிகள் { 5 }


{1}
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த
வேளையில்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்
இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து
நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது

காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்
களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்
என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்
எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து
படையில் சேருவேன்
வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம்
இல்லை
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்





{2}
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்-எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன்-தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா


எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது





{3}
ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
தந்தானானே தாரேனானா தானா ஏய்
தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்
கவிதைகள் பொய் ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே
யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்
சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தமிழீழ காவல்த்துறை


தமிழீழ காவல்த்துறை


தமிழீழ விடுதலைப்
போராட்டத்தில் முக்கிய
மைற்கல்லாக
அமைந்தது 'தமிழீழக்
காவற்றுறை' உருவாக்கம்.
தனிநாட்டுக்கான அலகுகள்
பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச்
செயற்பட்டு வருகிறது தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பு .
காவற்றுறை, சட்டத்துறை,
நீதித்துறை, நிதித்துறை,
சிவில் நிர்வாக சேவை,
ஆயப்பகுதி போன்ற பல
கட்டமைப்புக்கள்
சிறிலங்கா அரசாங்கத்தின்
கீழின்றி தனித்துச்
செயற்படுகின்றன .
பன்னாட்டுச்
செய்திநிறுவனங்களினதும்
அரசியலாளர்களினதும்
பார்வையில் ஏறத்தாழ
தனியரசுக்
கட்டுமானமொன்று இலங்கையின்
வடக்கு - கிழக்கில்
இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும்
அவற்றின்
செயற்பாடுகளுமே காரணம் .
அவ்வகையில் மிக முதன்மையான
கட்டமைப்பாக
நோக்கப்படுவது தமிழீழக்
காவற்றுறையாகும் .
அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு 18.11.2006
அன்றோடு பதினைந்து வருடங்கள்
நிறைவாகின்றன .
1991 ஆம் ஆண்டு இதேநாள்
யாழ்ப்பாணத்தில் தமிழீழக்
காவற்றுறையின்
முதலாவது அணி பயிற்சி முடித்து தம்
கடமைக்குச் சென்றது .
மிகக்குறைந்த
வளங்களோடும்
மட்டுப்படுத்தப்பட்ட
ஆட்பலத்தோடும்
யாழ்ப்பாணத்தில் திறம்பட
இயங்கத் தொடங்கிய
காவற்றுறையின்
சேவை படிப்படியாக மற்ற
இடங்களுக்கும்
விரிவாக்கப்பட்டது .
வன்னியில் போர் கடுமையாக
நடைபெற்ற காலப்பகுதியில்
மிதிவண்டிகள்
மட்டுமே காவற்றுறையின்
போக்குவரத்துக்குப்
பயன்படுத்தப்பட்டன .
பலபத்து மைல்கள் போய்
குற்றவாளியொருவரைக்
கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள்.
தாயக எல்லைகளைப்
பாதுகாக்கும் பணியிலும்
அவ்வப்போது காவற்றுயினர்
செயற்பட்டார்கள் .
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற
'யாழ்தேவி' முறியடிப்புச்
சமர் உட்பட பல சமர்களில்
அவர்கள்
துணைப்படையணியாகவும்
செயற்பட்டார்கள் . சிலர்
களத்தில்
வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
ஊழல், இலஞ்சம்
துளியளவுமற்ற கறைபடியாத
துறை தமிழீழக் காவற்றுறை.
போர்ச்சூழலில் சமூகக்
கட்டமைப்புக்
குலையாது பாதுகாத்த
பெருமை தமிழீழக்
காவற்றுறையைச் சாரும்

admin

தமிழீழ பாடல் வரிகள். { 6 }


{1}

காற்றாகி வந்தோம்
கடலாகி வந்தோம்
காதோரம்
ஒரு சேதி சொல்வோம்
காதோரம்
ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம்
புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச்
சென்றோம்
புரியாத புதிராகச்
சென்றோம்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள் -
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம்
செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம்
செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள்
எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள்
எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும்
நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது
காற்றும் நிலவும்
யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை -
நாங்கள்
போகும் திசையில்
சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும்
யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை -
நாங்கள்
போகும் திசையில்
சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த
காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது

தமிழீழ தேசிய பறவை :- செம்பகம்


தேசியப் பறவை செண்பகம்
பறவைகளைப் பொறுத்தவரை அதிக
பறப்புத்திறன் கொண்ட
பறவைகளுக்கு பெரும்பாலும்
ஒரு மண்ணுக்குரிய தனித்துவ
பூர்வீர்கத்
தன்மை கிடையாது . சில
பறவைகள்
நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும்.
பறப்புத்திறன் குறைந்த
பறவைகள் இந்த புலப்
பெயர்ச்சிக்குப்படுவதில்லை.
இதனால் பறப்புத்திறன்
குறைந்த
பறவைகளே ஒரு மண்ணுக்குரிய
மரபுரிமைச்
சொத்துக்களாகின்றன .
உலகின்
அதிகமான நாடுகளின் தேசியப்
பறவைகளாக பறப்புத் திறன்
குறைந்த
பறவைகளே இருக்கின்றன .
நமது தாயகத்தில் காடை,
கௌதாரி, செண்பகம், புளினி,
காட்டுக்கோழி, மயில் என்பன
உலகின் பலபகுதிகளிலும்
உள்ளன .
இனக்கூற்று அடிப்படையில்
இவற்றில்
நமது தாயகத்திற்குரிய
தனித்துவ அம்சங்கள்
குறைவாகவே உள்ளன .
இந்த வகையில் தமிழர்
தாயகத்தில் பறப்புத்திறன்
குறைந்த மரபுரிமைச்
சொத்துதாக உள்ள பறவைகளில்
தனித்துவ அம்சங்கள்
நிறைந்த செண்பகம் தேசியப்
பறவையாகப்
பிரகடனப்படுத்தப்படுள்ளது.
செண்பகம் பொதுவாக
ஆங்கிலத்தில் கிறேற்றர்
கூகல் அல்லது குறோ பீசன்ற்
என அழைக்கப்படுகின்றன .
நமது தாயகத்திலும்,
இந்தியா, சீனா, ஆகிய
நாடுகளிலும் இதன் இனங்கள்
வாழ்கின்றன .
கறுப்பு உடலையும் காவிநிற
செட்டைகளையும் கொண்ட
செண்பகம் காகத்தை விட
சற்றுப் பெரியது .
நமது சூழலில் இவை தத்தித்
தத்தி திரிவதை நாம்
காணலாம் . இது உலர்வலயப்
பகுதிகளில் தான் அதிகம்
உள்ளது .
மெதுவாக நடையும், தத்தித்
தத்தித் பாய்தலும் இதன்
தினத்துவ செயற்பாடுகள்.
பற்றைகள், சிறுமரங்களின்,
கீழ்ப்பகுதிகள் இதன்
வாழிடங்கள் . நத்தைகள்,
பூச்சிகள், அட்டைகள்,
தவளைகள், பாம்புகள்,
ஓணான்கள் செம்பகத்தின்
உணவுகள் ஆகும் .
பிற பறவைகளின் கூடுகளில்
இடப்பட்ட முட்டைகளையும்
செண்பகம் உண்ணும் .
செம்பகத்தின்
வேட்கைக்காலம்
பெப்ரவரியில்
இருந்து செப்டம்பர்
வரையாகும் .
இது தொடர்ந்து 3
முதல் 4 வரையான
முட்டைகளை இட்டு அடைகாக்கும்.
இதன் உயிரியல் பெயர்
சென்ரோபஸ் சினென்சிஸ்
(Centropus senensis)

தமிழீழ தேசிய மரம் :- வாகை


தமிழீழத் தேசிய மரம்.
வாகை
தமிழீழத்தின் தேசிய மரம்.
தமிழர் தாயகத்தின்
மரபுரிமைச்சொத்தாக
விளங்கி வரும் மரங்களில்
தொன்மைத்தன்மை வாய்ந்ததாக
வாகை உள்ளது .
சங்ககாலத்தில் போரில்
வெற்றிபெறும்
வீரர்களுக்கு வாகை மலர்
சூட்டப்படுதல்
நடந்திருக்கின்றது .
சங்க கால மரபின் மூலம்
வாகை எந்தளவுக்கு தமிழருடன்
இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக்
கொள்ளலாம் . வாகையில் பல
வகைகள் உள்ளன. தமிழர்
தாயகத்தில்
பூர்விகத்தன்மையாக
உள்ளது இயவாகை என்பதாகும்.
இதன் வேறு இனங்கள் பல
நாடுகளிலும் உள்ளன .
வாகை ஆங்கிலத்தில்
சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது.
லத்தினில்
வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa
Flexuosa).
என்று அழைக்ப்படுகின்றது.
இதன் தாவரவியல் பெயர்
albizza odaritissma.
வாகையின் பகுதிகள் சித்த
மருத்துவத்திலும்
பயன்படுகின்றது . தாவரவியல்
ரீதியாக வாகை மரத்தின்
பதிவைத் தருகின்றோம் .
Leguminosae (Mimisoideae)
தாவரவியல்க்
குடும்பத்தைச்
சேர்ந்தது வாகை . இது ஆகக்
கூடியது 25 மீற்றர்கள்
உயரத்துக்கு வளரும்.
கிளைகள்
அகலப்பரந்து ஒரு குடைபோல
ஆகும் .
தென்ஆசியப்பிராந்தியம்
தான்வாகையின் பூர்வீகம்.
இது உலர்வலயத்துக்குரிய
தாவரம் என்பதால்
இந்தியாவில் தமிழகமும்
இலங்கையில் தமிழீழமும்
அதன்
மரபுரிமை வாழிடமாகிவிட்டது.
ஆண்டுச்சராசரியாக
இதற்கு 800 முதல் 1000
மில்லிமீற்றர் வரையான
மழை தேவையானது .
வாகை வாழ்வதற்குரிய
மண்ணுக்கு 6க்குக் கூடிய
பி.எச் (pH) பெறுமான
அமிலத்தன்மை தேவை.
இது விதை மூலமும்,
தண்டுகள் மூலமும்
பெருக்கம் செய்யப்படும்.
விதைகள் விரைவாக முளைக்கச்
செய்ய 24 மணி நேரம்
அவற்றை சுடுநீரில்
போட்டுவைக்க வேண்டும்.
இதன் பிரதான
எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள்.
அவை இதன்
இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.
வாகை விறகுக்காக பண்ணையாக
வளர்க்கப்படும்
தாவரமாகவும் இருக்கிறது .

தமிழீழ தேசிய மலர் :- காந்தள்


தேசியத்தின் தேசத்தின்
அடையாளச் சின்னமாக
பூக்கள்
இலங்குவது யாவரும்
அறிந்ததே . அந்தந்த
தேசியத்தினதும்,
தேசத்தினதும்
வரலாற்று சமூக
பண்பாட்டின் பால்
பின்னிப்பிணைந்துள்ள
தொடர்புபட்டுள்ள
மலர்கள் தேசியப்
பூக்களாக
பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த
தேசியங்களால்
கௌரவிக்கப்படுவதும் ,
தேசியக்கொடிக்கு சமமாக
பேணப்படுவதும் ,
தொன்றுதொட்டு நிலவிவரும்
மரபு .
இந்த
வகையிலேயே தழிழர்களின்
தேசியப்பூவாக ,
தமிழீழத்தின் தேசியப்
பூவாக கார்காலத்தில்
மலர்ந்திடுவதும் , தமிழீழ
தேசியக்கொடியின்
வர்ணங்களைத்
தன்னகத்தே கொண்டுள்ளதும்,
தமிழீழத் தேசியத்
திருநாளாம் மாவீரர் நாள்
வருகின்ற நாட்களில்
கொடிபரப்பி பூத்துக்
குலுங்குவதும் , தமிழீழ
தேசமெங்ஙனம் பரவி முகிழ்
விடுவதுமான காந்தாள்
( கார்த்திகை)
பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மலர்கள்; தரணியில்
இலங்கிடும் தேசங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
வழமை தொன்றுதொட்டு வேதாகமக்
காலத்திலிருந்து நிலவி வருகின்றது.
கிறித்தவ வேதாகம நூலின்
பழைய
ஏற்பாட்டிலிலே சாலமனின்
பாடல் என்ற
அத்தியாயத்தில் (Song of
Solomon) பண்டைய எகிப்திய
தேசத்தினை தாமரையும்,
நீலோற்பலமும்
பிரதிநிதித்துவப்படுத்தின
என்ற
செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ் மன்னர்கள்
தத்தமக்கென தனித்தனியான
மலர்களைக்
கொண்டிருந்தனர்
என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக
உள்ளது .
அதாவது சோழருக்கு அத்திப்
பூவும் , சேரருக்கு பனம்
பூவும்,
பாண்டியர்க்கு வேப்;பம்
பூவும் தேசிய மலர்களாக
இருந்ததுள்ளன .
மேற்குறிப்பிட்ட
பூக்களின்
மாலைகளையே அவர்கள்
களமுனைகளுக்கு செல்லும்
போது அணிந்து சென்றதாக அ.
தட்சிணாமூர்த்தி என்பார்
யாத்த ~தமிழர்
நாகரிகமும் பண்பாடும்
என்ற நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்நூலில்
குறுநில மன்னர்களும்
தத்தமக்கு சொந்தமாக
மலர்கள் கொண்டுள்ளனர்
என்பதும்
குறிப்பிடப்படுகின்றது.
வீரத்தில்
சிறந்தவர்களாம் வேளிர்
மன்னர்களில் ஆய்
அண்டிரன் என்பார் .
சிறுபுன்னைப் பூவின்
மாலையையும் , ஏறைக்கோன்
என்பார் காந்தள்
மாலையும் அணிந்ததாக
மேற்படி நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கே காந்தள்
என்பது கார்த்திகைப்
பூவின் பாரம்பரியத்
தமிழ்ப் பெயராகும் .
இவ்வரலாற்றுச்
சான்றாதாரத்தினூடாக
கார்த்திகை மலருக்கும்
தமிழர் வரலாற்றுக்கும்
உள்ள
தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத்
தெட்டத்தெளிவாகின்றது.
தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில்
வாழுகின்ற மக்களின்
இறை நம்பிக்கைளிலும்
பூக்கள்
பங்கு வகிக்கின்றன
குறிப்பாக
இந்துக்களினதும்,
பௌத்தர்களினதும் அன்றாட
வாழ்வில்
இறை வணக்கத்திற்கு பூக்கள்
பயன்படுகின்றன .
இஸ்லாமியர்களின்
ஐதீகத்தின் பிரகாரம்
வெள்ளை றோசாக்கள் மொகமட்
ஆனவர்
சொர்க்கத்திற்கு செல்கின்ற
வழியில்
அவரது இனிமைப்பாட்டின்
வெளிப்பாடாக மலர்வதாகக்
குறிப்பிடுவர் . முருக
ஆராய்ச்சியாளரும்
கவிஞருமான
அறிவுமதியவர்கள்
பண்டைத் தமிழர்களின்
போர்க்கடவுளாம்
முருகனது மலரும்
கார்த்திகைப்
பூவே என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பண்டைய கிரேக்கத்தில்
புன்னை ஆனது அப்பலோ தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுவதோடு புலமையாளர்களை கௌரவிக்கப்படுவதற்கும்
உரியதாக விளங்கியது .
ஒலிவ் ஏதேன்ஸ் நகர
தேவதைக்குரியதாகவும்,
மெய்வல்லுனர்களையும்,
களத்தினில்
சாதனை படைத்தோரையும்
கௌரவப்படுத்துவதற்கும்
உரியதாக இருந்தது .
ரோமானியர்கள் தங்களுடைய
புகழ்பூத்த
தளகர்த்தர்களுக்கு சிந்தூர
மரத்தின் இலைகளாலும்
பூக்களாலும் வனையப்பட்ட
கிரீடங்களைச் சூட்டினர் .
இராணுவச் சின்னங்கள்,
நாடுகள், நகரங்கள்,
மாநிலங்கள் என்பனவும்
தத்தமது இருப்பை ,
கௌரவத்தை வெளிப்படுத்த
தமது சமூக கலாச்சார
பண்பாடு பின்னிப்
பிணைந்துள்ள பூக்களைப்
பயன்படுத்துகின்றனர் .
அமெரிக்க ஐக்கிய
நாடுகளின்
ஒவ்வொரு குடியரசிற்கும்
ஒவ்வொரு பூ குடியரசுப்
பூவாய்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழத் தேசியப் பூவாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
கார்த்திகைப் பூவைப்
பற்றிய மூலாதார
விடயங்களை அறிவோம் .
கார்த்திகைப்
பூவினை பண்டைத் தமிழ்
இலக்கியங்களிலே காந்தள்
என்றே அழைப்பார் .
ஒற்றை விதையிலைத்
தாவரங்களில் வெங்காயக்
குடும்பமாகிய
லில்லி ஆசியே (Lili aceae)
எனப்படும் வகையினைத்
சேர்ந்ததாகும் .
இக்கொடியின்
தண்டு பசுமையானது.
பலமில்லாதது. இலைகளின்
நுனிகள்
நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள்
போல பக்கத்திலுள்ள
மரஞ்செடி முதலிய
ஆதாரங்களைப்
பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20
அடி உயரம் வளரும்.
கிளை விட்டுப் படரும்
ஆண்டுதோறும் புதிய
கொடிகள்
நிலத்தினுள்ளே இருக்கும்
கிழங்கிலிருந்து வளரும் .
கிழங்கு சாதாரணமாக
இரண்டு பிரிவுள்ளதாக
இருக்கும் . 6-12 அங்குல
நீளமும் 1-1.5 அங்குலத்
தடிப்பும் உள்ளது.
இது கலப்பை போலத்
தோன்றுவதால் , இதனைக்
கலப்பை எனவும் அழைப்பர்.
காந்தள் மொட்டு
கிழங்கின்
ஒவ்வொரு பிரிவின்
முனையிலும் புதிய
கணு உண்டாகும் .
இலைகளுக்குக்
காம்பில்லை எனலாம். 3
அங்குலம் தொடக்கம் 6
அங்குலம் வரையான நீளம்,
0.75 அங்குலம் தொடக்கம்
1.75 அங்குலம்
வரை அகலமிருக்கும்.
மாற்றொழுங்கில்
அல்லது எதிரொழுங்கில்
அமைந்திருக்கும் .
கணுவிடைகள் வளராமையால்
வட்டவொழுங்கில்
அமைந்திருப்பதுமுண்டு.
இலை அகன்ற அடியுள்ள
ஈட்டிவடிவில் ,
நுனி கூராக
நீண்டு பற்றுக்கொம்பு போலச்
சுருண்டிருக்கும் .
பூக்கள் பெரியவை.
இலைக்கக்கத்தில் தனியாக
இருக்கும் .
அல்லது கிளைகளின்
நுனியில் இலைகள்
நெருங்கியிருப்பதால்
சமதள மஞ்சரி போலத்
தோன்றும் . அகல்
விளக்குப் போன்ற,
ஆறு இதழ் கொண்ட இப்பெரிய
பூக்கள் (6-7 செ.மீ நீளம்)
செப்ரம்பர் தொடக்கம்
ஜனவரியிலும் ,
மார்ச்சிலும்
மலர்கின்றன .
பூக்காம்பு 3-6 அங்குல
நீளமிருக்கும். முனையில்
வளைந்திருக்கும். 2.5
அங்குல நீளம், 0.3-0.5
அங்குல அகலம்
கொண்டதாகும்.
குறுகி நீண்டு ஓரங்கள்
அலைபோல
நெளிந்திருக்கும் .
தளை அவிழ்ந்த மலர்
ஏழு நாட்கள் வாடாமல்
இருக்கும் . இதழ்களில்
நிறம் முதலில் பச்சை,
பிறகு வெண்மை கலந்த
மஞ்சள் . பிறகு மஞ்சள்,
பிறகு செம்மஞ்சள்,
பிறகு துலக்கமான
சிவப்பு (Scarlet)இ நீலம்
கலந்த சிவப்பாக
மாறிக்கொண்டு போகும்.
இதழ்கள்
விரிந்து அகன்றோ,
பின்னுக்கு மடங்கிக்
கொண்டோ இருக்கும் .
கேசரங்கள் 6 அங்குலம்,
தாள் 1.5- 1.75 அங்குலம்,
மரகதப்பை 0.5 அங்குலம்.
முதுகொட்டியது,
இங்குமங்கும் திரும்பக்
கூடியது . சூலகம்: 3
அறையுள்ளது. சூல்
தண்டு 2அங்குலம்
ஒரு புறம்
மடங்கியிருக்கும்.
பூவின் நிறம் இருவேறாக
மாறுபடுவதால்
இதனை வெண்காந்தள் ;,
செங்காந்தள்; என்ற
இரு வேறு வகைகளாக
வருணிப்பார்கள் .
கிழங்கு பிரிந்து கணுக்கள்
உள்ளதை ஆண்காந்தள்
என்றும்
கணுக்களில்லாததை பெண்காந்தள்
என்றும் குறிப்பிடுவர் .
கார்த்திகைச் செடியின்
கிழங்கு ஆயுர்வேதம் ,
யுனானி முறைகளில்
பலவிதமாகப்
பயன்படுகின்றது .
இக்கிழங்கில்
காணப்படும்
நச்சுப்பொருளான
கொல்சிசைனே வைத்திய
முறைகளில்
பயன்படுகின்றது .
மேற்கு வைத்தியத்திலும்
கொல்சிசைன்
பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் இரு வைத்திய
முறைகளிலும்
கொல்சிசைசின்
பயன்பாடு வித்தியாசப்படுகின்றது.
தோலைப்பற்றிய
ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப்
பற்றுப் போடுவார்கள் .
தேள் கடிக்கும் இதனைப்
இழைத்துப் போடுவதுண்டு.
நேரடியாக
இக்கிழங்கினை உட்கொள்ளின்
நஞ்சாகும் .
சிறதளவு உட்கொண்டாலும்
முடி உதிரும் .
காந்தள் என
அழைக்கப்படும்
கார்த்திகைத் திங்களில்
முகிழ்விடும் இம்மலர்க்;
கொடி தமிழீழம் தவிர
இந்தியா , சீனா,
மலாக்கா தீபகற்பம்,
அயனமண்டல
ஆபிரிக்கா முதலான
பகுதிகளிலும்
காணப்படும் . இதன்
பூ தீச்சுவாலை போலக்
காணப்படுவதால்
~ அக்கினிசலம் எனப்படும்.
இதன்
கிழங்கு கலப்பை வடிவமானதாக
இருப்பதால்
கலப்பை எனவும்
~ இலாங்கிலி எனவும்
அழைக்கப்படும். இலைகளின்
முனை சுருண்டு காணப்படுவதால்
தலைச்சுருளி என்றும்
அழைக்கப்படும் .
அவற்றால்
இது பற்றி ஏறுவதால்
பற்றியென்றும்
அழைக்கப்படும் .
அவ்வாறு வளைந்து பற்றுவதால்
கோடல் ,
கோடை என்று அழைக்கப்படும்.
கார்;த்திகை மாதத்தில்
மலர்வதால் கார்த்திகைப்
பூ என்றும்
அழைக்கப்படுகின்றது .
மாரிகாலத்தில்
முதலிலேயே வனப்பாய்த்
தோன்றுவதால்
~ தோன்றி என்றும்
அழைக்கப்படும். சுதேச
வைத்தியத்திலே இதiனை ~வெண்தோண்டி எனவும்
அழைப்பர்.
இவ்வாறு தமிழ்மொழியில்
பலபெயர்களால்
அழைக்கப்படும் .
கார்த்திகைச்
செடியானது வேலிகளிலும்,
பாதையோரங்களிலும்,
காட்டோரங்களிலும்
இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய
விரல்கள் போலவும் ,
சுடர்கள் போலவும்
தோன்றும் .
இதனாலேயே இச்செடிக்கு மிக
மேலான
மாட்சிமை பொருந்தியது எனும்
பொருளில் புடழசழைளய
ளுரிநசடிய என்ற பெயரில்
அழைப்பர் .
கார்த்திகைப் பூவின்
ஏனைய மொழிப் பெயர்கள்
வருமாறு : சிங்களம்:
நியன்கல, சமஸ்கிருதம்:
லன்கலி, இந்தி: கரியாரி,
மராட்டி: மெத்தொன்னி
தாவரவியற் பெயர்:
லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae
Glory lily)
தேசத்தின் பூவாம்
கார்த்திகைப்

தமிழீழத்தேசிய விலங்கு :- சிறுத்தை


*தமிழீழத்தேசிய விலங்கு :-
சிறுத்தை
சிங்கள
தேசத்தில்
அம்பாந்தோட்டையின்
யால ,
அநுராதபுரத்தின்
வில்பத்து வனவிலங்குச்
சரணாலயங்களில்
தான்
சிறுத்தைகள்
உள்ளன .
கனடியச்
சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில்
உள்ள
சிறுத்தைகள்
உலகின்
சிறுத்தை இனங்களில்
தனித்துவமானவை.
இதுவே இலங்கையின்
தேசிய
விலங்காக
இருக்க
வேண்டும்
எனக்கூறிச்
சென்றார்.
தமிழர்
தாயகப்
பகுதியிலேயே சிறுத்தை அதிகம்
உண்டு .
இந்த
சிறுத்தை மஞ்சள்
உடலில்
கறுப்புப்
புள்ளிகளைக்
கொண்டது .
பூனை இன
பெரிய
விலங்குளான
சிங்கம் ,
புலி போல
அல்லாமல்
சிறுத்தை தங்க
என்று குறித்த
இடமும்
தேவையில்லை .
பாறை,
குன்று அல்லது ஒரு திட்டோ,
பள்ளமோ,
பற்றையோ,
மரமோ எங்கும்
ஒரு சிறு இடம்
சிறுத்தைக்குப்
போதும் .
தமிழர்
தாயகக்
காட்டுச்
சிறுத்தை சிறயமான்,
குரங்கு மயில்,
காட்டுக்கோழி,
முள்ளம்,
பன்றி,
முயல்
என்பனவற்றை வேட்டையாடிச்
சாப்பிடும் .
இந்தச்
சிறுத்தை மூக்குநுனி தொடக்கம்
வால்
நுனி வரையான
நீளம்
ஐந்தரை அடி .
ஆகக்கூடியதாக
8
அடி நீளமான
சிறுத்தைகளும்
உள்ளன .
நிறை 100
கிலோ வரைக்கும்
இருக்கும் .
சிறுத்தைக்குரிய
உயிரியல்
பெயர்
பாந்ரா பார்டஸ்
கொட்டியா (pathera
pardus
kotiya).
புலிக்குரிய
சிங்களப்
பெயர் தான்
கொட்டியா .
இலங்கை சிறுத்தைக்குரிய
உயிரியல்
பெயரிடலில்
சிங்கள
அறிஞர்களின்
ஆதிக்கம்
அதிகம்
இருந்ததலால்
கொட்டியா என்பது இறுதியில்
வந்துவிட்டது .
புலி,
சிங்கம்
பதுங்கிப்
பாய்ந்துதான்
பிராணிகளை வேட்டையாடும்.
ஆனால்
சிறுத்தை என்ன
செய்யும்
என்றால் ,
அது பிராணிகளை வேகமாகத்
துரத்திச்
சென்று வேட்டையாடும் .
வேட்டைத்தந்திரம்
சிறுத்தைக்குத்
தான் கூட
இருக்கின்றது என்றும்
சிறுத்தை ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர் .
ஒரு சிறுத்தை 25,
30
கிலோ கொண்ட
பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத்
தூக்கிக்
கொண்டு 8
அடி உயர
பாறையிலும்
ஏறும்
வல்லமை கொண்டது.
சிறுத்தைக்கு ஒடுங்கிய
அல்லது மெல்லிய
நீண்ட உடல்
இருப்பாதால்
வேகமாகச்
சுழுன்று திரும்புதல் ,
பாய்தல்,
ஓடி வேட்டையாடதுல்
என்பன அதன்
திறனாகும் .
தமிழர்
தாயகக்
காட்டுகதாநயாகன்
தான்
சிறுத்தை .
இதற்குத்
துல்லியமான
கேட்டல்
திறமை ,
கூர்மையான
பார்வைப்புலன்
உண்டு .
சிறுத்தையின்
வண்ணம்
காரணமாக
இங்குள்ள
வரண்ட
காடுகள்
அதற்கு நல்ல
உருமறைப்பு.
அதனால்
சிறுத்தையைக்
காடுகளில்
இலேசாகத்
தனித்துப்
பார்க்கமுடியாது.
அதோடு சிறுத்தை அதிகம்
கர்ச்சிக்காது .
மிக அரிதாக
அடித்தொண்டையால்
உறுமும் ,
அவ்வளவும்
தான் .
இங்கு வன்னியில்
“சருகுபுலி”
என்று சிறய
காட்டுப்பூனையைக்
காட்டுவார்கள் .
ஆனால்
சருகுப்புலி என்று சிறுத்தைத்தான்
குறிப்பிடப்படுகின்றது .
தமிழர்
தாயகத்திலோ சிங்களத்
தேசத்திலோ காட்டுப்புலி இல்லை.
அது இந்தியாவில்
தான்
இருக்கிறது .
புலி இந்தியாவின்
தேசிய
விலங்கு .
சிறுத்தை பெலிடே என்ற
விலங்குக்
குடும்பத்தைச்
சேர்ந்தது .
இங்கு இருக்கின்ற
தேசியத்தன்னைம
வாய்ந்த
தனித்துவ
விலங்கு சிறுத்தை தான்.
சிறுத்தையை ஆங்கிலத்தில்
பெலிபேட்
என்று அழைப்பார்கள் .
சிறுத்தையின்
வேறு இனங்கள்
உலகத்தின்
வேறு நாடுகளில்
வாழ்கின்றன .
பாந்தர்,
சீற்றா என்ற
இனங்களில்
எல்லாம்
உலகத்தில்
சிறுத்தைகள்
இருக்கின்றன.
அவற்றைவிட
இங்குள்ள
காட்டுச்சிறுத்தைகள்
தனித்துவமானவை .
உலகத்தில்
மிக
அருகி வரும்
விலங்கு சிறுத்தை.
தமிழர்தாயகத்தேசிய
விலங்காக
இருக்கின்ற
பாந்ரா பாhடஸ்
கொட்டியா இன
சிறுத்தையும்
உலகின்
முழுதாக
அழியும்
தறுவாயில்
இருக்கின்ற
மிக அரிதான
விலங்கு.
இதனை வேட்டையாடாமல்
அழிக்காமல்
பாதுகாக்கவேண்டும்.
வேட்டைக்காரர்கள்
பல்லுக்காகவும்
தோலுக்காகவும்
சிறுத்தையை வேட்டையாடுவார்கள்.
உணவுச்சங்கிலியில்
மோசமான
பாதிப்பு வரும் .
இந்த
சிறுத்தை தமிழரின்
தொன்மை சங்க
இலக்கியங்களிலும்
வருகின்றது .
அதுவே தமிழீழத்தின்
தேசிய
விலங்ககாகப்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத்தேசியக்கொடி பாகம் 2


தமிழீழத் தேசியக்கொடி
ஒரு நாட்டின் தேசிய
இனங்கள் ;,நாட்டு மக்கிளின்
பண்புகள்,ஆட்சி,இறைமை
என்பவை உட்பட அந்த
நாட்டைக் குறிக்கின்ற
ஒட்டுமொத்தமான பொதுச்
சின்னமாகத் தேசியக்
கொடி விளங்குகின்றது .
ஒவ்வொரு நாட்டின்
இயல்புகள்
நிலைமைகள் ,எண்ணங்களின்
வெளிப்பாடாக அந்தந்த
நாட்டுக் தேசிய கொடிகளின்
சின்னம் நிறம் அளவு என்பன
வேறுபட்டிருக்கும் .தேசியக்
கொடியின்
அளவு பெரும்பாலும் 3:2 என்ற
அளவினதாகவே இருக்கின்றது.
சில நாடுகளின் தேசியக்
கொடிகள் 2:1, 1:1 என்ற
அளவினைக் கொண்டதாகவும்
இருக்கின்றது
நாம்
போற்றி வணங்குதற்கூடாக
தேசியக் கொடிக்கு வணக்கம்
செலுத்தப்படுகின்றது .
தேசியக்கொடியை வணங்குவது
நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டை போற்றி
வணங்குவதற்கூடாகத்
தேசியக் கொடிக்கு வணக்கம்
செலுத்தப்படுகின்றது .
தேசியக்கொடியை வணங்குவது
நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டின் தலைவர்களைவிட,
படை, ஆட்சி என்பவற்றைவிட
உயர்ந்ததாகத் தேசியக்
கொடி மதிக்கப்படுகின்றது.
எனவேதான் எந்த
ஒரு நாட்டிலும் எந்தச்
சிறப்பு நிகழ்வுகளின்
போதும் நாட்டின்
தலைவர் ,படை,அரசலுவலர்,
குடிமக்கள் அனைவரும்
கொடிவணக்கம் செய்கின்றனர்.
தேசியக்
கொடிக்கு வழங்கப்படுகின்ற
மதிப்பு ,சிறப்பு என்பன
அந்த நாட்டைச்
சென்றடைகின்றன.அது போன்றே
தேசியக்
கொடிக்கு ஏற்படுத்தப்படும்
இழிவு ,
புறக்கணிப்பு என்பனவும்
அதன் நாட்டைச்
சென்றடையும் ,எனவேதான்
தேசியக்கொடிக்கு
ஏற்படுத்தப்படும்
இழிவு பெருங்குற்றமாகக்
கருதப்படும்
அக்குற்றத்துக்குக் கடும்
ஒறுப்பு (தண்டணை)
வழங்கப்படுகின்றது.
எமது தேசியத் தலைவர்
மேதகு வே .பிரபாகரன்
அவர்களால் 1977 ஆம்
ஆண்டு,விடுதலைப் புலிகள்
இயக்கத்திற்கென
உருவாக்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டு வந்த
புலிக்கொடியில் இருந்த
எழுத்துக்கள்
நீக்கபட்டு தமிழீழத்தின்
தேசியக்கொடியாக 1990 ஆம்
ஆண்டு தேசியத் தலைவர்
அவர்களால்
அறிவிக்கட்பட்டது . 1990
ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம்
நாள் மாவீரர் எழுச்சிவாரத்
தொடக்க நாளன்று முதல்
தடவையாகத் தமிழீழத்
தேசியக் கொடி எமது தேசியத்
தலைவர் அவர்களால்
ஏற்றிவைக்கபட்டது .
அன்றிலிருந்து
தமிழீழத்தில் நடைபெறும்
சிறப்பு நிகழ்வுகள்
தமிழீழத்
தேசியக்கொடி ஏற்றப்பட்டே
தொடங்கப்படுகின்றன .
தேசியக்கொடி
ஏற்றப்படும்போது தமிழீழத்
தேசியக்கொடி வணக்கப்பண்
பாடப்படுகின்றது .
தலைவர்கள்,
சிறப்புக்குடிமக்கள்
போன்றோரின்
மறைவையொட்டி ஏற்படும்
நாட்டின் துயர
நிகழ்வுகளின்போது
தேசியக்கொடி
கொடிக்கம்பத்தின்
உச்சிவரை ஏற்றப்பட்டு
கொடிக்கம்பத்தின்
நடுப்பகுதிவரை இறக்கிக்
கட்டிப்
பறக்கவிடப்படுவது வழக்கம்.
இதன்மூலம் நாட்டின் துயரம்
உணர்த்தப்படுகின்றது .
எமது நாட்டை அமைப்பதற்கான
விடுதலைப்
போராட்டத்தை வீறு
கொள்ளவைத்த ,
மக்களை விடுதலை
இயக்கத்தின்பால்
ஈர்த்து அணி திரளவைத்த
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் கோட்குறியான
( இலட்சினையான) பாயும்
புலியே எமது
தேசியக்கொடியின் நடுவில்
அமைந்திருக்கிறது .
எமது தேசியக்கொடியை மஞ்சள்,
சிவப்பு,கறுப்பு,வெள்ளை
ஆகிய நான்கு நிறங்கள்
அழகுபடுத்துகின்றன .
தமிழீழ
மக்களுக்கு ஒரு தாயகம்
உண்டு . அந்த தாயகம்
அவர்களது சொத்துரிமை.
தமிழீழ மக்கள்
ஒரு தனித்துவமான தேசிய
இனம் என்பதால்
அவர்களுக்குத்
தன்னாட்சி (சுயநிர்ணய)
உரிமை உண்டு.இந்த
தன்னாட்சி உரிமை அவர்களது
அடிப்படை அரசியல்
உரிமை .தமது தாயகத்தை
மீட்டெடுத்து,தன்னாட்சி
உரிமையை நாட்டுவதற்கு
தமிழீழ மக்கள்
மேற்கொண்டுள்ள தேசிய
விடுதலைப் போராட்டம்
அறத்தின்பாற்பட்டது .மனித
தர்மத்தை அடிப்படையாகக்
கொண்டது என்பதை மஞ்சள்
நிறம் சுட்டி நிற்கின்றது.
ஏற்றத் தாழ்வுகளற்ற,
வர்க்க, சாதிய,
முரண்பாடுகளற்ற
பெண்ணடிமைத்தனமற்ற
புரட்சிப்பாங்கான அரசியல்
இலக்கைச் சிவப்பு நிறம்
குறியீடு செய்கின்றது .
கரடுமுரடான, சாவும்
அழிவும் தாங்கொணாத்
துன்பங்களும் நிறைந்த
வழிக்கூடாகச்
சென்று எமது இலக்கை
அடைவதற்கு வேண்டிய
உருக்குப்போன்ற உள்ள
உறுதியைக் கறுப்பு நிறம்
குறித்துக்காட்டுகின்றது.
அமைப்பினதும்
போராட்டத்தினதும்
தூய்மையை ,
நேர்மையை வெள்ளை நிறம்
வெளிப்படுத்தி நிற்கின்றது
.
எமது தேசியக் கொடியை நாம்
எமது உயிரிலும் மேலாகப்
போற்றிப்
பேணிப்பாதுகாப்பது எமது
தலையாய கடமையாகும் .கொடிவணக்க ஒழுங்குமுறை
தேசியக்கொடி ஏற்றப்படும்
கொடிக்கம்பத்தின் உயரம்
22 அடிக்குக் குறைவாக
இருக்கக்கூடாது.
தேசியக்கொடியின்
நீளம் 4 அடியாகவும்
உயரம் 3 அடியாகவும்
இருத்தல் வேண்டும்
தேசியக்கொடியுடன்
வேறு கொடிகளும்
ஏற்றப்படின் அக்கொடிகள்
தேசியக்கொடியைவிடப்
பெரிதாக இருக்கக்கூடாது.
தேசியக்கொடியேற்றப்பட்ட
கொடிக்கம்பத்தைவிட ஏனைய
கொடிக்கம்பங்கள் 2
அடி உயரம் குறைந்ததாக
இருக்க வேண்டும் .
தேசியக்கொடியுடன்
பிறநாடுகளின்
தேசியக்கொடிகள்
ஏற்றப்படுவதாயின்
ஒரே அளவு உயரமுள்ள
கொடிக்கம்பத்தில்
ஒரே அளவான
கொடிகளை ஏற்றலாம்.ஆனால்
எமது தேசியக்கொடிக்கு
இடப்புறமாகவே
ஏனையநாடுகளின் கொடிகள்
பறக்கவிடப்படவேண்டும் .
எமது தேசியகொடியுடன்
பிறநாட்டுத்
தேசியக்கொடிகளை
ஏற்றுவதாயின்
எமது தேசியக்கொடி
ஏற்றப்பட்டதன்
பின்பே ஏனைய
தேசியக்கொடிகள்
ஏற்றப்படவேண்டும்.
கொடிகள்
இறக்கப்படும்போது ஏனைய
கொடிகள்
இறக்கப்படவேண்டும் .
பின்பு இறுதியாகவே எமது
தேசியக்கொடி இறக்கப்பட
வேண்டும் .ஏனைய கொடிகள்
பறந்துகொண்டிருக்போது
எமது தேசியக்கொடியை
ஒருபோதும்
இறக்கக்கூடாது .
ஊர்வலங்களில்
தேசியக்கொடியை எடுத்துச்
செல்வதாயின் கொடியின்
உயரத்தின் 4
பங்கு உயரமான கம்பத்தில்
கட்டி நெஞ்சுக்கு
நேராகவோ அன்றி
வலத்தோளிலோ ஏந்திச்
செல்ல
வேண்டும் .தேசியக்கொடியை
ஏந்திச்செல்பவருக்கு
முன்பாக வேறு எந்தக்
கொடியை ஏந்துபவரும்
முந்திச் செல்லக்கூடாது.
கூட்ட மேடைகளில்
பேச்சாளரின்
தலைக்கு மேலாக பின்
புறத்தட்டியில்
தேசியக்கொடியைக்
கட்டலாம் .
தேசியக்கொடியில்
எதுவும்
எழுதப்பட்டிருக்கக்
கூடாது .
தேசியக்கொடி கிழிந்தோ,
சிதைந்தோ போனால் அதைப்
பழந்துணியாகப்
பயன்படுத்தவோ
குப்பைத்தொட்டியில்
வீசவோகூடாது .
தேசியக்கொடியை வணிக
விளம்பரத்துக்கோ ,
விரிப்பாகவோ அன்றி
வேறெந்தத்
தேவைகளுக்காகவோ பயன்படு;
த்தக்கூடாது.
குறிப்பிட்ட சில உயர்
அரச பணியகக்
கட்டிடங்களில் மட்டும்
தேசியக்கொடி
கொடிக்கம்பத்தில்
ஏற்றப்படலாம் .
கட்டிடங்களில்
கொடிக்கம்பத்தில்
ஏற்றப்படும்
தேசியக்கொடி நாள்தோறும்
கதிரவன் எழுந்ததற்குப்
பின்னர்
ஏற்றப்பட்டு மறைவதற்கு
முன்பாக
இறக்கப்படவேண்டும் .
ஆட்சிப்பொறுப்பிலுள்ளோர
்,தலைவர்கள் ,உயர்
அலுவலர்கள் வீடுகளிலும்
எந்நாளும் பகலில்
தேசியக்கொடி பறக்க
விடப்படலாம் .
வெளிநாடுகளிலுள்ள
எமது கிளைகளிலும்
தூதரகங்களிலும் பகலில்
எந்நாளும்
எமது தேசியக்கொடி பறக்க
விடப்படலாம் .
குறிப்பிட்ட சில
நாட்களில் மட்டும்
பொதுமக்கள் வீடுகளில்
கட்டிடங்களில் ,
தேசியக்கொடி
பறக்கவிடப்படலாம்.இவை
முறையாகக் கம்பங்களில்
மட்டுமே
ஏற்றப்படவேண்டும் .
தெருவுக்குக்
குறுக்காகவோ பக்கமாகவோ
கயிறுகளில் தேசியக்கொடி
தொங்கவிடப்படக்கூடாது .
தேசியக்கொடியைத்
தலைகீழாக
பறக்கவிடக்கூடாது.
தேசியக்கொடியிலுள்ள
புலி ,கொடிக்கம்பத்தைப்
பார்த்தவாறு
பறக்கவிடக்கூடாது.
புலியின் பார்வை
கொடிக்கம்பத்துக்கு
எதிர்ப்புறமாகக்
கொடி பறக்கும் பக்கமாக
இருக்கும் வகையில் கொடி
பறக்கவிடப்படவேண்டும் .
தேசியக்கொடியைக்
கீழிருந்து
பறந்தபடியிருக்கும்
நிலையிலேயே ஏற்றவேண்டும்
. மடித்தபடி மேலே ஏற்றி
அங்கிருந்து விரிந்து
பறக்கும் வகையில்
தேசியக்கொடி
ஏற்றக்கூடாது .
தேசியக்கொடியை ஏற்றுபவர்
கொடி வணக்கம் செலுத்த
அணிவகுத்து நிற்கும்
மக்களுக்கும் ,
கொடிக்கம்பத்திற்கும்
இடையில்
நின்று கொடியை ஏற்றுதல்
கூடாது . தேசியக்கொடியை
ஏற்றும்போது அனைவரும்
எழுந்து நின்று வணக்கம்
செலுத்த வேண்டும் .
தேசியக்கொடி
ஏற்றப்படுவதுபோல்,
இறக்கப்படுவதும்
ஒழுங்கு முறையிலான
சிறப்பு நிகழ்வாகவே
இருக்கவேண்டும் .
கொடியை இறக்குபவரும்
முதன்மையானவராக ,
தகுதியானவராக இருத்தல்
வேண்டும் .
தேசியக்கொடி
இறக்கப்படும்பொழுது
நிலத்தில்
விழாது எட்டக்கூடிய
உயரத்திலேயே வைத்து
கைகளில் ஏந்தி எடுத்தல்
வேண்டும்.
தேசியக்கொடி இறக்கும்
நிகழ்வின்போது கையொலி
எழுப்பக்கூடாது .
அந்நிகழ்வு அமைதியாக
நடைபெறவேண்டும் .
தேசியக்கொடி பொதுவாக
மாலை 6.00
மணிக்கு முன்னர்
முறைப்படி
இறக்கப்படவேண்டும்.
கொடியேற்றித்
தொடக்கப்படும்
நிகழ்சிகள் மாலை 6.00
மணிக்குப் பின்னரும்
தொடருமாயின்
நிகழ்ச்சி முடிவுற்றதும்
கொடியை முறைப்படி
இறக்கலாம் .
கொடியேற்றித்
தொடங்கப்படும்
நிகழ்ச்சி நாட்கணக்கில்
தொடருமாயின் அந்த
நிகழ்ச்சிகள்
முடிவுறும்
வரை தேசியக்கொடி இரவும்
தொடர்ச்சியாகப்
பறக்கவிடப்படலாம் .
நிகழ்ச்சிகள்
முடிவடைந்தபின்
முறைப்படி தேசியக்கொடி
இறக்க வேண்டும் .

தமிழீழ உட்கட்டுமானங்கள்


*தமிழீழ மாவட்டங்கள்
{1}யாழ்ப்பாணம்
{சப்ததீவுகள் உட்பட}
{2}மன்னார்
{3}கிளிநொச்சி
{4}வவுனியா
{5}திருகோணமலை
{6}மட்டக்களப்பு
{7}அம்பாறை
{8}புத்தளம்
{9}முல்லைத்தீவு
*தமிழீழ உட்கட்டுமான
அமைப்புகள்
வழங்கற் பிரிவு
மருத்துவப் பிரிவு
கொள்முதல் பிரிவு
பரப்புரைப் பிரிவு
தமிழீழப் பொறியியற்றுறை
வெடிபொருள்
தொழில்நுட்பப் பிரிவு
கணிணி தொழில்நுட்பப்
பிரிவு
இலத்திரனியல்
தொழில்நுட்பப் பிரிவு
போர்கருவித்
தொழிற்சாலை
தமிழீழ இராணுவ
விஞ்ஞானக் கல்லூரி
விடுதலைப்புலிகளின்
ஆங்கிலக் கல்லூரி
திரைப்பட , புத்தக
மொழிபெயர்ப்புத் துறை
புலனாய்வுத் துறை
தமிழீழ
விடுதகலைப்புலிகளின்
அரசியற்றுறை
தமிழீழ விளையாட்டுத்
துறை
தமிழீழக்
கல்வி மேம்பாட்டுக்
கழகம்
தமிழீழக்
கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ நீதித்துறை
தமிழீழ நிர்வாக துறை
தமிழீழ நிதித் துறை
தமிழீழ வைப்பகம் (வங்கி)
தமிழீழக் காவல்துறை
விடுதலைப்புலிகளின்
சுகாதாரப் பிரிவு
சூழல் நல்லாட்சி ஆணையம்
தமிழீழ வனவளப்
பாதுகாப்புப் பிரிவு
தமிழீழப் பொருண்மிய
மேம்பாட்டு நிறுவனம்
பொருண்மிய மதியுரையகம்
தமிழீழக்
காலநிலை அவதானிப்பு
நிலையம்
தமிழீழக் காட்டுமானப்
பொறியியற்செயலகம்
வடகிழக்கு மனித உரிமைகள்
செயலகம்
ஓளிக்கலைப்பிரிவு (
நிதர்சனம், ஒளி வீச்சு)
விடுதலைப்புலிகளின்
வெளியீட்டுப் பிரிவு
புலிகளின் குரல்
( வானொலி)
விடுதலைப்புலிகள்
பத்திரிகை
எரிமலை சஞ்சிகை
தமிழீழத் தேசியத்
தொலைக்காட்சி
*தமிழீழபடையணிகள்
கடற்புலிகள்
வான்புலிகள்
லெப். கேணல் இராதா விமான
எதிர்ப்புப் படையணி
மாலதி படையணி (
பெண்புலிகள்)
சோதியா படையணி (
பெண்புலிகள்)
- மகளிர் படையணியில்
முதன் முதல் உருவாகிய
படையணி
அன்பரசி படையணி (
பெண்புலிகள்)
சிறுத்தைகள்
கரும்புலிகள்
கடற்கரும்புலிகள்
கேணல் கிட்டுப்
பீரங்கிப் படையணி
லெப். கேணல் விக்ரர்
கவசவாகன எதிர்ப்புப்
படையணி
லெப். கேணல்
குட்டிசிறி மோட்டார்ப்
படையணி
ஜெயந்தன் படையணி
சார்ள்ஸ்
அன்ரனி சிறப்புப் படையணி
இம்ரான் பாண்டியன்
படையணி
இம்ரான் பாண்டியன்
உந்துருளி அணி
எல்லைப் படை
துணைப்படை
*****

தேசியத்தலைவரின் எண்ணத்திலிருந்து


THALAIVAR SINTHANAIKAL *குட்டக் குட்டத்
தலைகுனிந்து அடிமைகளாக,
அவமானத்துடன் வாழ்ந்த
தமிழரைத்
தலை நிமிர்த்தி
தன்மாத்துடன்
வாழ வைத்த
பெருமை எமது விடுதலை
இயக்கத்தையே சாரும்.
*தமிழ் மக்களின்
சுதந்திரத்திற்காகவும்,
கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும்
தமது இன்னுரை அர்பணித்துள்ள
மாவீர்களான தியாகிகள் ,
காலம் காலமாக எமது இதயக்
கோவிலில் பூசிக்கப்பட
வேண்டியவர்கள் .
*எதிரியால்
ஆக்கிமிக்கபட்டிருக்கும்
எமது மண்ணை முதலில்
மீட்டெடுப்பது இன்றைய
வரலாற்றின் தேவை . இந்த
வரலாற்று நிர்ப்பந்தத்தை
நாம் தட்டிக்கழிக்க
முடியாது .
*தங்களது உயிர்களையும்,
உடமைகளையும் பாதுகாக்கும்
சக்திவாய்ந்த ஒரு தேசியப்
படையுடன்
இணைந்து சுதந்திரத்
தமிழீழத்தை நிறுவினாலெழிய,
ஒரு போதும் தமிழர்கள்
பாதுகாப்பாக இருக்கப்
போவதில்லை .
*விடுதலைப் போராட்டத்தில்
மக்கள் வெறும்
பார்வையாளராக இராது ,
நேரடிப் பங்காளிகளாக
மாறவேண்டும் .
*இது கரும்புலிகள்
சகாப்தம் , இடியும்
மின்னலுமாகப் புலிகள்
போர்க் கோலம் பூண்டு விட்ட
காலம் ***தமிழீழ
தேசியத் தலைவரின்
சிந்தனையிலிருந்து***
*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம் சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு
செய்து நிற்கின்றன .
*வீதிகளில், சந்துகளில்,
சுவர்களில் நாம்
சந்திக்கும்
மாவீரர்களது
திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு
காட்சி தருகின்றன.
*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால் எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம் .
*சத்தியத்திற்காய் சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப்
பிறவியும் சரித்திரத்தைப்
படைக்க முடியும் .
*மற்றவர்கள்
இன்புற்றிருக்க வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் , அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி - தந்திரம் -
துணிவு இந்த மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம் இல்லாமல்
மனித
வாழ்வில் அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச்
சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல் கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் , ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின் பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது.
*மக்களின் துன்ப
துயரங்களில் பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை.
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல் படி.
விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியற்ப் பாதை.
*இன்றைய காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான , புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும், கலையும்,
பண்பாடும் எமது நீண்ட
வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே
பிறக்கின்றது .
*மனித ஆன்மாவின் ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது
தமிழினத்தின்
தேசிய அன்மாவில் விழுத்திய
ஆழமான வடுக்கள் ஒருபோதும்
மாறப்போதில்லை .
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை , எந்தப்
புதிய சவாலையும் நாம்
சந்திக்கத் தயார் .
*மாவீரர்கள் காலத்தால்
சாவதில்லை . அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை
கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது
மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும் வரை, நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது
தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான், மனித
வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான் .
*நாம் தமிழீழப் பெண்
சமூகத்தின் மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை
நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப் போற்றுவதும்,
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு.
எமது சொந்தப் பலத்தில்
நாம் வேரூன்றி நிலையாக
நிற்பதால் , மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து
நிற்கமுடிகின்றது .
*அனைத்துத் தமிழ்
மக்களும்
ஒரே இனம் என்ற தேசாபிமான
உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள் ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு, சாதாரண மரண
நிகழ்வு அல்ல, எனது தேச
விடுதலையின் ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது
மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால் உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.
*கரும்புலிகள்
எமது இனத்தின் தற்காப்புக்
கவசங்கள் - எமது போராட்டப்
பாதையின் தடை நீக்கிகள் -
எதிரியின் படைபலத்தை மனப்
பலத்தால் உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள் .
*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் . இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின் நாம்
போராடியே ஆகவேண்டும் .
*நான் பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின்
வாழ்வே பெரியது .
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள்
அனுபவிக்க வேண்டும் .
*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல
அந்தச் சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர் உன்னத
இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை , அவனது உயிராக
இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து
விடுவதில்லை .
*தமிழீழ மண்ணில்
ஆயுதப்புரட்சி
இயக்கத்திற்கு
அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின் வீர மரபைச்
சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து
வளர்ந்திருக்கின்றது.
*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு
எதிராகப்
போராட வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி
நிற்பவர்களே அநீதியை
ஒழித்துத்துக்
கட்ட முன்வர வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப் புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச் சாத்தியமான
காரியமுமல்ல .

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner