-->

கரும்புலிகள் தினம் < யூலை 5 >

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில் , 'கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது . என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது . கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள் . தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள் . கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும் , உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம் . இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும் . பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும் . எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் . ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது . இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது . இது கருப்புலிகளின் சகாப்தம் . இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும் . சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள் ", என்று தெரிவித்தார்.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner