-->

பூநகரி நாயகர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் 11.11.2010

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

பூநகரி நாயகர்களின்
17 ம்
ஆண்டு நினைவு நாள் 11 நவம்பர்,
2010


பூநகரி
கூட்டுப்படைத்
தளம்
மீது
மேற்கொள்ளப்பட்ட
தவளை
படைநடவடிக்கையில்
வீரச்சாவை
அணைத்து கொண்ட
வேங்கைளின் 17ம் ஆண்டு
நினைவு நாள் 11-11-2010.


11.11.1993 தொடங்கப்பட்ட
படைநடவடிக்கையில்
பூநகரி படைத்தளத்தின்
பெரும் பகுதி
விடுதலைப் புலிகளால்
கைப்பற்றப்பட்டு
தகர்த்து
அழிக்கப்பட்டதுடன்
பெருந்தொகையான
போராயுதங்களும் வெடி
பொருட்களும்
கைப்பற்றப்பட்டன.

இந்த
வெற்றிகர சமரில்
லெப்.கேணல் குணா,
லெப்.கேணல் நவநீதன்,
லெப்.கேணல் அருணன்
(சூட்), லெப்.கேணல்
அன்பு, லெப்.கேணல் பாமா
, கடற்கரும்புலிகள்
மேஜர் கணேஸ்(குயிலன்),
மேஜர் கோபி(குமணன்)
உட்பட 460 வரையான
போராளிகள்
வீரச்சாவைத் தழுவிக்
கொண்டனர்.


பலாலி
படைத்தளத்திலிருந்து
பூநகரியில்
தாக்குதலுக்கு
இலக்காகும்
படையிருக்கான உதவிகள்
சென்றடைவதைத் தடுத்து
நிறுத்தும் நோக்குடன்
பலாலி
படைத்தளத்திற்குள்
11.11.1993 அன்று
ஊடுருவிய
கரும்புலிகளின்
சிறப்பு அணி
படைத்தளதினுள்
தாக்குதல்களை நடாத்தி
சிறிலங்கா படையினரை
நிலையை வைத்து தவளை
நடவடிக்கையின்
வெற்றிக்கு
வழியேற்படுத்தியது.


இந்த சிறப்பு
நடவடிக்கையில் மேஜர்
தொண்டமான், மேஜர்
கலையழகன் உட்பட்ட 13
கரும்புலிகள்
வீரகாவியமாகினர்.


தமிழீழ தாயக
விடுதலைக்காய் தமது
இன்னுயிரை ஈந்த இந்த
வீரமறவர்களிற்கு எமது
வீரவணக்கங்கள்.

இதே
நாளில் வீரச்சாவைத்
தழுவிய ஏனைய
மாவீரர்களிற்கும் வீரவணக்கங்கள் .



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner