23ம் ஆண்டு நினைவலைகள்
செப்டெம்பர் 15
அன்று திலீபன்
தனது உண்ணா நோன்
பினை ஆரம்ப
ித்து நீர
ாகாரம் கூட
அருந்தாது 12
நாட்கள்
பட்டினி கிடந்த
ு அவனது க
ோரிக்கைகளை (க
ாந்தி உண்ணா நோ
ன்பிருந்து ப
ெற்றுக்
கொடுத்ததாக
சொல்லப்படும் )
இந்திய
அரசு செவி சாய்க
்காத நிலையில்
செப்டெம்பர் 26
சாவினைத்
தழுவிக்
கொண்டான்.
திலீபன்
வெள்ளையனே வெளி
யேறு என்பது போல
இந்தியனே வெளிய
ேறு என
ஒரு போதும்
கேட்டதில்லை.
எதற்காக
ஈழத்திற்கு வந்
தீர்களோ ? என்ன
உறுதிமொழிகளை
தந்தீர்களோ அவற
்றை அமுல்ப்
படுத்துங்கள்
என்று மட்டுமே க
ேட்டான் . பசி
மறந்து கிடந்த
பிள்ளையின்
போருக்கு பாரதம
் சாவினைப்
பரிசளித்துப்
பல்லிளித்தது .
திலிபன்
நினைவுகள்
தியாகி திலீபன்
உலக
வரலாற்றிலே ஓர்
புதிய
அத்தியாயத்தின
் ஆரம்பம்
மட்டுமல்ல ...
தமிழீழ மக்கள்
புரட்சியின்
திறவுகோல் . ஈழ
விடுதலைப்
போராட்டத்தின
் அகிம்சைத் தீ .
அணையா
விளக்கு,
அகிம்சையால்
எழுந்த
பாரதமெனும்
நாட்டுக்கு ,
அகிம்சையின்
அர்த்தம்
கற்பித்த
புலிவீரன் .இந்த
ிய-
சிறீலங்கா ஒப்ப
ந்தமெனும்
சூழ்ச்சிப்
பொறியோடு ,
தமிழீழ
மக்களின்
துன்பங்களையும
் ,
வேதனைகளையும்
வெட்டி
வீழ்த்தி விடுவ
ோமென்று
கூறிக்கொண்டு
பாரதப் படைகள்
எம் மண்ணில்
காலூன்றியபோத
ு தமிழீழ
மக்களின்
மகிழ்ச்சி உச்ச
ிமேவிப்
பிரவாகித்தது.
ஆனால்
இந்திய அரசின்
கபடம் மெல்ல
மெல்ல வெளிவரத்
தொடங்கியபோத
ு ஐந்து அம்சக்
கோரிக்கைகளை ம
ுன்வைத்து பன்
னிருநாட்கள்
தண்ணீருமின்றி
உண்ணாநோன்பிர
ுந்த
தமிழீழ
விடிவிற்காய்
உயிர்த்தியாகம
் செய்தான்
தியாகி திலீபன்
.1963.11.27
இல்
ஊரேழு என்னும்
கிராமத்தில்
பிறந்த
இராசையா பார்த்
தீபன் என்னும்
திலீபன்
கல்வியில்
சிறந்துவிளங்க
ி பல்கலைக்கழக
மருத்துவபீட
அனுமதியைப்
பெற்றான்.
தமிழீழ
மக்களின்
இன்னல்கண்டு தன
து கல்வியை உத
றித்தள்ளி
1983 காலப்
பகுதியில்
லெப் . கேணல்
பொன்னம்மான்
அவர்களின்
தொடர்பு மூலமா
க
தன்னை விடுதலைப
் புலிகள்
அமைப்பில்
இணைத்துக்
கொண்டான்.
ஆரம்ப
காலங்களில்
இயக்க அரசியல்
வேலைகளில்
ஈடுபட்ட
திலீபன் ,
பின்னர் யாழ்.
மாவட்ட அரசியல்
துறைப்
பொறுப்பாளராக
நியமிக்கப்பட்
டான் .
இக்காலப்பகுதி
யில்
சிறீலங்காப்
படைகளுடனான
நேரடி மோதல்கள
ிலும்
தனது திறமையினை
வெளிப்படுத்தி
வந்தார் .
மக்கள்
மத்தியில் மிக
அன்பாகப்
பழகியதுடன்
அவர்களது
முன்னேற்றத்து
க்காக பல
அமைப்புகளையும
் நிறுவினான் .
விடுதலைப்
புலிகள்
அமைப்பையும் பல
புதிய
பரிணாமங்களிற்
கு இட்டுச்
செல்ல
வழிவகுத்துச்
செயற்பட்டார்.
களத்தில்,
சுதந்திரப்
பறவைகள் உட்பட
பல
பத்திரிகைகளை
ஆரம்பித்து செய
ற்படுத்தினான் .
விடுதலைப்
புலிகளின்
மாணவர்
அமைப்பு ,
மகளிர்
அமைப்பு,
சுதந்திர
பறவைகள்
அமைப்பு , தேச
பக்தர்
அமைப்பு என்பவற
்றுடன்
தமிழீழ கிராமிய
நீதி மன்றங்கள்
, விழிப்புக்
குழுக்கள்,
சர்வதேச
உற்பத்திக்
குழுக்கள் ,
தமிழீழ
ஒலி ஒளி சேவைக்
கட்டுப்பாட்டு
ச் சபை , தமிழர்
கலாசார அவை
என இவன்
ஆரம்பித்து நெற
ிப்படுத்திய
பலவற்றைஅடுக்க
ிக்கொண்டே போ
கலாம்.
இவ்வாறு விடுதல
ைக்காய்
தீவிரமாய்
உழைத்துவந்த
லெப் . கேணல்
திலீபன்
இந்திய -
சிறீலங்கா ஒப்ப
ந்தத்தை சி
றீலங்கா அரசு
மீறுவது கண்டு ,
பயங்கரவாதத்
தடைச்சட்டத்தி
ன் கீழ்
தடுப்புக்
காவலிலும் ,
சிறைகளிலும்
உள்ளோர்
விடுவிக்கப்பட
வேண்டும் ,
புனர்வாழ்வு என
்னும் பெயரில்
தமிழர்
தாயகத்தில்
நடாத்தப்படும்
சிங்களக்
குடியேற்றங்கள
் உடனடியாக
நிறுத்தப்பட
வேண்டும் ,
இடைக்கால
அரசு நிறுவப்பட
ும்
வரை 'புனர்வாழ்
வு' என்னும் சகல
வேலைகளையும்
நிறுத்த
வேண்டும்.
வடக்கு கிழக்கி
ல் காவல்
நிலையங்கள்
திறக்கப்படுவத
ு
நிறுத்தப்பட
வேண்டும்.
இந்திய
அமைதிப்படையின
்
மேற்பார்வையில
் உள்ள
ஊர்காவற்
படையினரின்
ஆயுதங்கள்
திரும்பப்
பெறப்பட்டு தமி
ழ்க்
கிராமங்கள் ,
பள்ளிக்கூடங்க
ள் என்பவற்றில்
குடியிருக்கும
் இராணுவ
பொலீஸ்
நிலையங்கள்
அகற்றப்பட
வேண்டும் என
ஐந்து கோரிக்க
ைகளை ம
ுன்வைத்து பல்
லாயிரக்
கணக்கான
மக்கள் திரள்
முன்
தண்ணீருமின்றி
தன்
பட்டினிப்போர
ாட்டத்தை ஆரம்ப
ித்தான்
திலீபன் .
பன்னிரு நாட்கள
் தன்பாராமுகத்
தன்மையினால்
திலீபன்
என்னும் தியாக
வீரனை சாவின்
வாய்க்குத்
தீனியாக்கியது
பாரத அரசு .
'மக்கள்
புரட்சி வெடிக்
கட்டும் ,
சுதந்திர
தமிழீழம்
மலரட்டும்'
posted by rojan at Saturday, September 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தியாகதீபம் திலீபன் <முழுமையான தொகுப்பு
நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22- ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25. 1986- இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது. ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர். "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர். எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை. தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை. பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன. நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம். நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10. 48 மணிக்குப் பிரிந்தது. எங்கும் அழுகை.. . விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. மேலும்
posted by rojan at Saturday, September 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
ஊரெழு தியாகி திலீபனின் தாய்மண்
posted by rojan at Saturday, September 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
அகிம்சை எனும் அகல் விளக்கின் அடியும் முடியும் இவனே
posted by rojan at Wednesday, September 15, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தியாகதீபத்தின் இதயம் உருக்கும் கதைகேளு
துணிந்த
வரலாறு -
திலீபனை
மறந்து தொலைத்தால்
பெரும்பாடு .
இதயம்
உருக்கும்
கதை கேளு -
திலீபன்
இறந்து படைத்த
உணர்வோடு !
இருபத்திநான்கு வருட
-
வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள்
- விரதமடா
உயிரை வெல்லக்
கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம்
தந்த -
தியாகியடா!
முடுக்குமூளை உணர்வெல்லாம்
- திலீபன் -
மூளைமுடுக்கு உணர்வெல்லாம்
-
விடுதலை உணர்வை
கொடுத்த
யோகியடா .
தன் -
உயிரை கொடுத்து
ஈழம் படைக்க -
அவன்
இறந்தே உரைத்த
ஆணையடா !
உலகம் -
திரும்பிப்
பார்த்த
தமிழனடா
வீரம் -
செறிந்துக்
கிடந்த
இளைஞனடா
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
இன்று
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
ஈழம்
என்றோ கிடைத்த
செய்தியடா !
எழுந்து வீர
நடை போடு ..
விடுதலை கிடைக்காவிட்டால்
-
சமர் போடு ..
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
ஈழம் பிறக்கும்
வரைக்கும் -
போராடு!
அன்றைய -
ஐந்து கட்டளை
போதாது ;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது ;
ஈழம்.. ஈழம்..
கிடைக்கும்
வரை -
திலீபனின்
ஆத்தமா கூட
உறங்காது !!!!
posted by rojan at Tuesday, September 14, 2010 0 உங்கள் கருத்துக்கள்
இருபத்து மூன்றாண்டுகள் கடந்தோடிப்போனது. <2010>
கடந்தோடிப்போனது
இதயமோ இன்னமும்
கண்ணீரில்
வாடுது
நினைவுகள்
நெஞ்சத்தில்
நேற்றுப் போல்
இருக்குதே
இருபத்துமூன்றாண்டுகள்
இன்றென ஆனதே
தங்கத்
தமிழீழம்
பெற்றெடுத்த
மைந்தனே
பார்த்தீபன் என
நாமம் பெற்ற
எங்கள் திலீபனே
வங்கக் கடல்
தாண்டி வந்து நின்ற
பாரதத்தை
வாய் அடைக்க
வைத்தே போர்
தொடுத்த வீரனே.
பன்னிரு நாட்கள்
நீரின்றி உணவின்றி
அணுவணுவாய்
உனை வதைத்து
உண்ணா நோன்பிருந்தாய்
நேற்றுப்போல்
இருக்கிறதே எல்லா நினைவுகளும்
செந்நீரை சிந்திய
தேசத்தில்
ஒரு ஜீவன்
உண்ணாமல்
நோன்பிருத்தல்
கண்டு
கண்மூடித்
தூங்கிய
காந்தி மகாத்மாவே - உனை
கருணைக்கண்
திறந்து பார்த்திருப்பார்.
திலீபன்
திலீபன் என
திசையெங்கும்
கதற
தீயாய் உன்
தேகம்
நீரின்றிக் காய
கண்கள்
இருண்டு தொண்டை
வரண்டு
கை கால்
சோர்ந்து மெய்
நோவானதாய் .....
குடல்கள்
சுருங்கி உடல்
வலிகண்டு
குற்றுயிராகி ஜீவன்
சுற்றிச்
சுழன்று
கூக்குரல்
எழுப்பி தமிழ்
ஆர்ப்பரித்தெளுந்தும்
கொண்ட
கொள்கையில்
குறியென
இருந்தவன்
காந்தி தேசமே பாரத
பூமியே
நீதிக்கு வழிகாட்டும்
இந்திய
தேசமே
கருணையே வடிவான
காருண்ய தேசமே
உரிமையை பெறத்தானே உண்ணா நோன்பிருந்தான்
பெற்ற
வயிறெல்லாம்
பற்றி எரிந்தது
அனல் கக்கும்
கண்களோடு
கனல்
கக்கி தமிழினம்
புனல்
அருந்தா ஜீவனோடே புரண்டது
மலையான
ஒரு தேகம்
சிலையான போது -
அகிம்சை
மதியாது பாரதம்
தடம்
மாறியே புது விதியானது.
விடுதலையின்
விருட்சமே நீ
வெற்றி கண்டாய்
விலையாக இன்
உயிரை தமிழுக்கு தந்தாய்
கண்ணீரில்
வாடி நாம்
கதி கலங்கி போனாலும்
செந்நீரை ஊற்றி
எம்
தேசத்தை காப்போம்.
இலட்சிய
வேங்கையே கண்மூடித்
தூங்குவாய் -
உன்
கனவுகள்
நனவாகும்
அப்போ கண்
விளித்துப்
பார்ப்பாய் .
posted by rojan at Tuesday, September 14, 2010 0 உங்கள் கருத்துக்கள்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை -
பாடும்பறைவகள் வாருங்கள் -புலி வீரன் திலீபனைப் பாடுங்கள் -யாகத்தில்
ஆகுதி ஆனவன் நாமத்தை ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள் -
(பாடும்பறைவகள்……………………..
இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது , நீதிக்கு சோதனை தந்தது , நாங்கள் சிந்திய
ரத்தங்கள் காய்ந்திடும் முன்னரே கால்களில் வீழ் எனச் சொன்னது ,
வேங்கைகள் இதை தாங்குமா - குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?
வீரன் திலீபன் வாதாடினான்- பசி தீயில் குதித்து போராடினான்
வாயில் ஒருதுளி நீரதும் இன்றி- வாசலில் பிள்ளை கிடந்தான்
நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது- ஆணவத்தோடு நடந்தான்- சாவினில்
புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது பார்த்து மகிழ்ந்தது- ராணுவம் புலிச்
சாவுக்கு ஆதிக்கம் காரணம்- அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம்
செய்திட வந்தாய் -
எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்-
துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது.
காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&warned=True&client=mv-google&hl=en-GB&v=bo7e3URZrX8
posted by rojan at Tuesday, September 14, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தியாகதீபம் நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை
posted by rojan at Tuesday, September 14, 2010 0 உங்கள் கருத்துக்கள்
வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை
posted by rojan at Sunday, September 12, 2010 0 உங்கள் கருத்துக்கள்
வன்னிபடைத்தள தாக்குதலின் 2ம் ஆண்டு
posted by rojan at Friday, September 10, 2010 0 உங்கள் கருத்துக்கள்
திலீபனுடன் பன்னிரண்டாம் நாள் 26-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010
posted by rojan at Tuesday, September 07, 2010 0 உங்கள் கருத்துக்கள்
திலீபனுடன் பதினோராம் நாள் 25-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010
posted by rojan at Tuesday, September 07, 2010 0 உங்கள் கருத்துக்கள்
திலீபனுடன் பத்தாம் நாள் 24-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010
posted by rojan at Tuesday, September 07, 2010 0 உங்கள் கருத்துக்கள்
திலீபனுடன் ஒன்பதாம் நாள் 23-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010
posted by rojan at Tuesday, September 07, 2010 0 உங்கள் கருத்துக்கள்