-->

இருபத்து மூன்றாண்டுகள் கடந்தோடிப்போனது. <2010>

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

இருபத்துமூன்றாண்டுகள்
கடந்தோடிப்போனது
இதயமோ இன்னமும்
கண்ணீரில்
வாடுது
நினைவுகள்
நெஞ்சத்தில்
நேற்றுப் போல்
இருக்குதே
இருபத்துமூன்றாண்டுகள்
இன்றென ஆனதே
தங்கத்
தமிழீழம்
பெற்றெடுத்த
மைந்தனே

பார்த்தீபன் என
நாமம் பெற்ற
எங்கள் திலீபனே
வங்கக் கடல்
தாண்டி வந்து நின்ற
பாரதத்தை
வாய் அடைக்க
வைத்தே போர்
தொடுத்த வீரனே.

பன்னிரு நாட்கள்
நீரின்றி உணவின்றி
அணுவணுவாய்
உனை வதைத்து
உண்ணா நோன்பிருந்தாய்
நேற்றுப்போல்
இருக்கிறதே எல்லா நினைவுகளும்
செந்நீரை சிந்திய
தேசத்தில்
ஒரு ஜீவன்
உண்ணாமல்
நோன்பிருத்தல்
கண்டு
கண்மூடித்
தூங்கிய
காந்தி மகாத்மாவே - உனை
கருணைக்கண்
திறந்து பார்த்திருப்பார்.


திலீபன்
திலீபன் என
திசையெங்கும்
கதற
தீயாய் உன்
தேகம்
நீரின்றிக் காய
கண்கள்
இருண்டு தொண்டை
வரண்டு
கை கால்
சோர்ந்து மெய்
நோவானதாய் .....

குடல்கள்
சுருங்கி உடல்
வலிகண்டு
குற்றுயிராகி ஜீவன்
சுற்றிச்
சுழன்று
கூக்குரல்
எழுப்பி தமிழ்
ஆர்ப்பரித்தெளுந்தும்
கொண்ட
கொள்கையில்
குறியென
இருந்தவன்

காந்தி தேசமே பாரத
பூமியே
நீதிக்கு வழிகாட்டும்
இந்திய
தேசமே
கருணையே வடிவான
காருண்ய தேசமே
உரிமையை பெறத்தானே உண்ணா நோன்பிருந்தான்
பெற்ற
வயிறெல்லாம்
பற்றி எரிந்தது
அனல் கக்கும்
கண்களோடு
கனல்
கக்கி தமிழினம்
புனல்
அருந்தா ஜீவனோடே புரண்டது
மலையான
ஒரு தேகம்
சிலையான போது -
அகிம்சை
மதியாது பாரதம்
தடம்
மாறியே புது விதியானது.

விடுதலையின்
விருட்சமே நீ
வெற்றி கண்டாய்
விலையாக இன்
உயிரை தமிழுக்கு தந்தாய்
கண்ணீரில்
வாடி நாம்
கதி கலங்கி போனாலும்
செந்நீரை ஊற்றி
எம்
தேசத்தை காப்போம்.

இலட்சிய
வேங்கையே கண்மூடித்
தூங்குவாய் -
உன்
கனவுகள்
நனவாகும்
அப்போ கண்
விளித்துப்
பார்ப்பாய் .


மீள்பதிவு



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner