-->

தமிழர் வரலாற்றில் ஜீலை 83

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழர்களின்
செங்குருதியில்
எழுதப்பட்ட
நாள் 1983
யூலை 23
தமிழினத்தின்
வரலாற்றில் இது
ஓர் மறக்க
முடியாத நாள் !
"கறுப்பு யூலை"
உயிரைப்
பிழிந்தெடுத்த
உண்மையின்
மறுமலர்ச்சியின்
நாள்
அத்திகதியுடன்
இன்று 27
வருடங்கள்
பூர்த்தியாகின்றது


தமிழின
மக்களின்
மீது பாரிய
இனஅழிப்பையும்
தமிழின
விரோதத்தையும்
தூண்டி விட்ட
நாள் !
தமிழர்களைக்
கண்ட இடத்தில்
துன்புறுத்தல் ,
இனப்படுகொலை செய்தல் ,
உடமைகளை அழித்தல்
என்ற
மனநிலையை
சிங்கள இன
வெறியாளர்களாலும்
காடையர்
குழுக்களாலும்
நாடெங்கும்
திட்டமிட்டும்
தமிழின இன
அழிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டும்
வெலிக்கடை சிறைச்சலையில்
53
தமிழ் சிறைக்
கைதிகளை படுகொலை செய்தும்
உலகிற்கு தனது இன
விரோதத்தை வெளிப்படுத்தியும்
பேரினவாதத்திற்க்கும்
ஓர் உடனடிக்
காரணமாகவும்
அமைந்த நாள் !

தமிழின
அழிப்பு என்கின்ற
திட்டத்தில்
தமிழினத்தின்
மீது தாக்குதல்களை நடாத்தியும்
அச்சமூட்டியும்
அவர்களை பணிய
வைத்தும்
தனது மேலான்மையை சிங்களம்
வலுப்படுத்திய
நாள் !
அடக்கு முறையாளர்கள்
போராளிகளை
அழிப்பதில்காட்டும்
தீவிரத்தை விட
பொது மக்களின்
ஆன்ம
உறுதியை உடைக்க
வேண்டும்
என்பதில்தான்
அதிக
அக்கறை காட்டுகின்றனர் .
நமது வெற்றியின்
இரகசியமும் ,
எங்களுக்கான
நேரமும்
எங்களோடுதான்
அந்த
நேரத்துக்கான
வேலையை நாம்
செய்தோம் ஆனால்
நமது வெற்றியின்
இரகசியம்
எமக்கு புரியும்
சோர்வடையாதே தமிழா துணிந்து நில் !
மொழியாகி எங்கள்
மூச்சாகி
நாளை முடிசூடும்
தமிழ்
மீது உறுதி !
வழிகாட்டி எம்மை உருவாக்கும்
தலைவன்
வரலாறு மீதிலும்
உறுதி !
விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கைவீரர்கள்
மீதிலும்
உறுதி !
இழிவாக வாழோம்
தமிழீழப்
போரில்
இனிமேல் ஓயோம்
இது உறுதி !


சிறி நவரத்தினம்



1 Comment:

Anonymous said...

nanry

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner