-->

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைகள் 2

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கல்வியும் , மொழியும் , பண்பாடும் , நிலமும்
எமது இனக்கட்டமைப்பைத்தாங்கி நிற்கும் தூண்கள்
...
மிகவும் கொடுங்கோன்மையான , இராணுவ சர்வாதிகார
ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது
. . .
தமிழ்
இனத்தின் ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின் மூலம்
எம்மை அடிமை கொள்ளச்செய்வதே எதிரியின் திட்டம்
. . .
இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்களதேசம்
மூழ்கிக்கிடக்கும்வரை தமிழரின்
அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீதியான நியாயபூர்வமான அரசியல்
தீர்வை நாம் சிங்கள ஆளும்
வர்க்கத்திடமிருந்து எதிர்பார்க்கமுடியாது
. . .
இன ஒடுக்குமுறையாலும் ராணுவ அடக்குமுறையாலும்
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்த்துவிடமுடியாது
. . .
எமது மொழியில், எமது பண்பாட்டில், எமது கலைகளில்,
எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும், நேசமும்
தேசியபற்றுணர்வாக பரிணாமம் பெறுகின்றன
. . .
சிங்கள அரசின் திட்டமிட்ட
ஒடுக்குமுறை காரணமாகவே சுயநிர்ணய உரிமைக்காகவும்
அரசியல் உரிமைக்காகவும் போராட்டத்தில் குதித்தோம்
. . .
எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம்
கண்டு கொள்ளது சுலபம் ஆனால்
துரோகி முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள் எதிரியின்
கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள்
தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்
கொடுக்கும் இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள்
மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க
வேண்டும்
. . .
இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில்
சூழலவில்லை ஒவ்வொரு நாடும் தனது தேசிய தேசிய
சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது மனிதஉரிமை,
மக்கள்உரிமை என்ற தார்மீக
அறத்திலிருந்து வழுவி பொருளாதார, வர்த்தக
நலன்களே நோக்காகக்கொண்டுள்ளது
. . .
அறிவின் அதியுயர்ந்து பிறப்பது தான் எளிமை
தன்னலமும், தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக
எளிமை தோன்றுகின்றது இந்த எளிமை ஒருவனை ஆழமான
மனிதனாக ஆக்குகின்றது
. . .
நாம் சுதந்திர மனிதர்களாக
எமது தலையெழுத்தை நாமே நிர்ணயிக்கும்
உரிமை பெற்றவர்களாக இருந்தால் தான், கல்வி உட்பட சகல
சமூக அமைப்புக்களிலும் ஒரு உன்னதமான
வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச்
செல்லமுடியும்
. . .
விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம் நெருப்பினை நீந்திக்கடக்கும் நீண்ட
பயணம் தியாகத்தீயினில் குதிக்கும் யாகம் இந்த
விடுதலை வேள்விக்கு தமது உயிர்களை சுகங்களை தியாகம்
செய்தவர்கள் மாவீரர்கள்
. . .
விடுதலை என்ற இலட்சியத்தை நாம்
இலகுவாகத்தேர்ந்தெடுக்கவில்லை வரலாறு தான்
அதை எம்மிடம் வலுக்கட்டாயமாக கையளித்து,
சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதனையும்
வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை
. . .
குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத்
தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே
சாரும்
. . .
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள்,
காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்
. . .
எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது
இன்றைய வரலாற்றின் தேவை இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் தட்டிக்கழிக்க
முடியாது
. . .
தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு
தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய ஒரு
போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை
. . .
விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப்
பங்காளிகளாக மாறவேண்டும்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner