-->

தமிழீழ காவல்த்துறை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


தமிழீழ காவல்த்துறை


தமிழீழ விடுதலைப்
போராட்டத்தில் முக்கிய
மைற்கல்லாக
அமைந்தது 'தமிழீழக்
காவற்றுறை' உருவாக்கம்.
தனிநாட்டுக்கான அலகுகள்
பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச்
செயற்பட்டு வருகிறது தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பு .
காவற்றுறை, சட்டத்துறை,
நீதித்துறை, நிதித்துறை,
சிவில் நிர்வாக சேவை,
ஆயப்பகுதி போன்ற பல
கட்டமைப்புக்கள்
சிறிலங்கா அரசாங்கத்தின்
கீழின்றி தனித்துச்
செயற்படுகின்றன .
பன்னாட்டுச்
செய்திநிறுவனங்களினதும்
அரசியலாளர்களினதும்
பார்வையில் ஏறத்தாழ
தனியரசுக்
கட்டுமானமொன்று இலங்கையின்
வடக்கு - கிழக்கில்
இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும்
அவற்றின்
செயற்பாடுகளுமே காரணம் .
அவ்வகையில் மிக முதன்மையான
கட்டமைப்பாக
நோக்கப்படுவது தமிழீழக்
காவற்றுறையாகும் .
அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு 18.11.2006
அன்றோடு பதினைந்து வருடங்கள்
நிறைவாகின்றன .
1991 ஆம் ஆண்டு இதேநாள்
யாழ்ப்பாணத்தில் தமிழீழக்
காவற்றுறையின்
முதலாவது அணி பயிற்சி முடித்து தம்
கடமைக்குச் சென்றது .
மிகக்குறைந்த
வளங்களோடும்
மட்டுப்படுத்தப்பட்ட
ஆட்பலத்தோடும்
யாழ்ப்பாணத்தில் திறம்பட
இயங்கத் தொடங்கிய
காவற்றுறையின்
சேவை படிப்படியாக மற்ற
இடங்களுக்கும்
விரிவாக்கப்பட்டது .
வன்னியில் போர் கடுமையாக
நடைபெற்ற காலப்பகுதியில்
மிதிவண்டிகள்
மட்டுமே காவற்றுறையின்
போக்குவரத்துக்குப்
பயன்படுத்தப்பட்டன .
பலபத்து மைல்கள் போய்
குற்றவாளியொருவரைக்
கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள்.
தாயக எல்லைகளைப்
பாதுகாக்கும் பணியிலும்
அவ்வப்போது காவற்றுயினர்
செயற்பட்டார்கள் .
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற
'யாழ்தேவி' முறியடிப்புச்
சமர் உட்பட பல சமர்களில்
அவர்கள்
துணைப்படையணியாகவும்
செயற்பட்டார்கள் . சிலர்
களத்தில்
வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
ஊழல், இலஞ்சம்
துளியளவுமற்ற கறைபடியாத
துறை தமிழீழக் காவற்றுறை.
போர்ச்சூழலில் சமூகக்
கட்டமைப்புக்
குலையாது பாதுகாத்த
பெருமை தமிழீழக்
காவற்றுறையைச் சாரும்

admin


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner