-->

தேசியத்தலைவரின் எண்ணத்திலிருந்து

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


THALAIVAR SINTHANAIKAL *குட்டக் குட்டத்
தலைகுனிந்து அடிமைகளாக,
அவமானத்துடன் வாழ்ந்த
தமிழரைத்
தலை நிமிர்த்தி
தன்மாத்துடன்
வாழ வைத்த
பெருமை எமது விடுதலை
இயக்கத்தையே சாரும்.
*தமிழ் மக்களின்
சுதந்திரத்திற்காகவும்,
கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும்
தமது இன்னுரை அர்பணித்துள்ள
மாவீர்களான தியாகிகள் ,
காலம் காலமாக எமது இதயக்
கோவிலில் பூசிக்கப்பட
வேண்டியவர்கள் .
*எதிரியால்
ஆக்கிமிக்கபட்டிருக்கும்
எமது மண்ணை முதலில்
மீட்டெடுப்பது இன்றைய
வரலாற்றின் தேவை . இந்த
வரலாற்று நிர்ப்பந்தத்தை
நாம் தட்டிக்கழிக்க
முடியாது .
*தங்களது உயிர்களையும்,
உடமைகளையும் பாதுகாக்கும்
சக்திவாய்ந்த ஒரு தேசியப்
படையுடன்
இணைந்து சுதந்திரத்
தமிழீழத்தை நிறுவினாலெழிய,
ஒரு போதும் தமிழர்கள்
பாதுகாப்பாக இருக்கப்
போவதில்லை .
*விடுதலைப் போராட்டத்தில்
மக்கள் வெறும்
பார்வையாளராக இராது ,
நேரடிப் பங்காளிகளாக
மாறவேண்டும் .
*இது கரும்புலிகள்
சகாப்தம் , இடியும்
மின்னலுமாகப் புலிகள்
போர்க் கோலம் பூண்டு விட்ட
காலம் ***தமிழீழ
தேசியத் தலைவரின்
சிந்தனையிலிருந்து***
*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம் சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு
செய்து நிற்கின்றன .
*வீதிகளில், சந்துகளில்,
சுவர்களில் நாம்
சந்திக்கும்
மாவீரர்களது
திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு
காட்சி தருகின்றன.
*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால் எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம் .
*சத்தியத்திற்காய் சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப்
பிறவியும் சரித்திரத்தைப்
படைக்க முடியும் .
*மற்றவர்கள்
இன்புற்றிருக்க வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் , அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி - தந்திரம் -
துணிவு இந்த மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம் இல்லாமல்
மனித
வாழ்வில் அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச்
சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல் கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் , ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின் பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது.
*மக்களின் துன்ப
துயரங்களில் பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை.
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல் படி.
விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியற்ப் பாதை.
*இன்றைய காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான , புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும், கலையும்,
பண்பாடும் எமது நீண்ட
வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே
பிறக்கின்றது .
*மனித ஆன்மாவின் ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது
தமிழினத்தின்
தேசிய அன்மாவில் விழுத்திய
ஆழமான வடுக்கள் ஒருபோதும்
மாறப்போதில்லை .
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை , எந்தப்
புதிய சவாலையும் நாம்
சந்திக்கத் தயார் .
*மாவீரர்கள் காலத்தால்
சாவதில்லை . அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை
கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது
மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும் வரை, நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது
தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான், மனித
வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான் .
*நாம் தமிழீழப் பெண்
சமூகத்தின் மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை
நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப் போற்றுவதும்,
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு.
எமது சொந்தப் பலத்தில்
நாம் வேரூன்றி நிலையாக
நிற்பதால் , மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து
நிற்கமுடிகின்றது .
*அனைத்துத் தமிழ்
மக்களும்
ஒரே இனம் என்ற தேசாபிமான
உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள் ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு, சாதாரண மரண
நிகழ்வு அல்ல, எனது தேச
விடுதலையின் ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது
மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால் உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.
*கரும்புலிகள்
எமது இனத்தின் தற்காப்புக்
கவசங்கள் - எமது போராட்டப்
பாதையின் தடை நீக்கிகள் -
எதிரியின் படைபலத்தை மனப்
பலத்தால் உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள் .
*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் . இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின் நாம்
போராடியே ஆகவேண்டும் .
*நான் பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின்
வாழ்வே பெரியது .
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள்
அனுபவிக்க வேண்டும் .
*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல
அந்தச் சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர் உன்னத
இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை , அவனது உயிராக
இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து
விடுவதில்லை .
*தமிழீழ மண்ணில்
ஆயுதப்புரட்சி
இயக்கத்திற்கு
அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின் வீர மரபைச்
சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து
வளர்ந்திருக்கின்றது.
*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு
எதிராகப்
போராட வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி
நிற்பவர்களே அநீதியை
ஒழித்துத்துக்
கட்ட முன்வர வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப் புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச் சாத்தியமான
காரியமுமல்ல .


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner