-->

தமிழீழ பாடல் வரிகள் { 3 }

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற



{1}
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
வேங்கை கடல் வீரர் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
இன்னல் இனி மேலும் இல்லை
புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
பூமி தனிலேது தொல்லை
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தம்பி
எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
பகையை முடிப்பானே பொங்கி
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்
வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)





{2}
பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)

இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)

விடுதலைபுலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)





{3}
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்
என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்
இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்
புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை
பூவாய் வளர்கிறோம்
கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை
ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்
காலம் வரையும் தோள்களில்
இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)
இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே
மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே
உறவினை வளர்ப்பார்கள்
இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி
எரிந்திட போவார்கள்
பாட்டும் கூத்தும் பகிடியுமாக
பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)
பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்
ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்
எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்
இந்த வேளையும் பகைவர் மிதினில்
எரியும் விருப்பினில் இருப்பார்கள்
அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்
முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)
வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்
எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
அட உலகுக்கு எங்கே இது புரியும்
கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்
நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்
ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner