-->

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

***தமிழீழ
தேசியத்
தலைவரின்
சிந்தனையிலிருந்து***

*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம்
சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன.

*வீதிகளில்,
சந்துகளில்,
சுவர்களில்
நாம்
சந்திக்கும்
மாவீரர்களது திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.


*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால்
எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம்
இழைத்தால்
நாம்
பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம்.

*சத்தியத்திற்காய்
சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண
மனிதப்
பிறவியும்
சரித்திரத்தைப்
படைக்க
முடியும்.

*மற்றவர்கள்
இன்புற்றிருக்க
வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் ,
அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப்
போராட்டம்
என்பது இரத்தம்
சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி -
தந்திரம் -
துணிவு இந்த
மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம்
இல்லாமல் மனித
வாழ்வில்
அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம்
எமக்குச்
சாட்சியாக
நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல்
கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் ,
ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின்
பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட
முடியாது .
*மக்களின்
துன்ப
துயரங்களில்
பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான
அரசியல் வேலை .
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல்
படி .
விடுதலைப்
போராட்டம்
என்பது இரத்தம்
சிந்தும்
புரட்சிகர
அரசியற்ப்
பாதை.
*இன்றைய
காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய
கர்த்தாக்கள்
புதுமையான ,
புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும்,
கலையும்,
பண்பாடும்
எமது நீண்ட
வரலாற்றின்
விழுதுகளாக
எமது மண்ணில்
ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
*மனித
ஆன்மாவின்
ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது தமிழினத்தின்
தேசிய
அன்மாவில்
விழுத்திய
ஆழமான வடுக்கள்
ஒருபோதும்
மாறப்போதில்லை.
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை ,
எந்தப்
புதிய
சவாலையும் நாம்
சந்திக்கத்
தயார் .
*மாவீரர்கள்
காலத்தால்
சாவதில்லை .
அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும்
வரை , நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான்,
மனித
வாழ்க்கையின்
அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான்.
*நாம் தமிழீழப்
பெண்
சமூகத்தின்
மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப்
போற்றுவதும்,
கற்றோரைக்
கௌரவிப்பதும்
தமிழர்களாகிய
எமது மரபு ,
எமது சீரிய
பண்பாடு .
எமது சொந்தப்
பலத்தில்
நாம்
வேரூன்றி நிலையாக
நிற்பதால் ,
மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.
*அனைத்துத்
தமிழ் மக்களும்
ஒரே இனம் என்ற
தேசாபிமான
உணர்வுடன்
போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள்
ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு,
சாதாரண மரண
நிகழ்வு அல்ல,
எனது தேச
விடுதலையின்
ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால்
உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.

*கரும்புலிகள்
எமது இனத்தின்
தற்காப்புக்
கவசங்கள் -
எமது போராட்டப்
பாதையின்
தடை நீக்கிகள் -
எதிரியின்
படைபலத்தை மனப்
பலத்தால்
உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள்.

*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் .
இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின்
நாம்
போராடியே ஆகவேண்டும் .

*நான்
பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப்
பெரிதானால்
நாம் எல்லோரும்
அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற
வாழ்விலும்
பார்க்க
நாட்டின்
வாழ்வே பெரியது.
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த
பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை .
எமது கடின
உழைப்பின்
பயனை அவர்கள்
அனுபவிக்க
வேண்டும் .

*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண
நிகழ்வல்ல
அந்தச்
சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர்
உன்னத
இலட்சியம்
உயிர்பெறும்
அற்புதமான
நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை ,
அவனது உயிராக
இயங்கி வந்த
இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

*தமிழீழ
மண்ணில்
ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின்
வீர மரபைச்
சித்தரிக்கும்
சின்னமாக
உதித்த
எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர
விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப்
போராட
வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக்
கட்ட முன்வர
வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப்
புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச்
சாத்தியமான
காரியமுமல்ல .


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner