-->

தமிழினம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற





சிங்கள இனவெறியரால்
எமதினம் சிதைபட்டு
திட்டமிட்டு அழிபடும் வேளையிலே
எமதினத்தின் விடுதலைக்காய்
வல்வெட்டித்துறையிலே ஊரிக்காட்டுமண்ணிலே
வீரத்தாய் பெற்றெடுத்த வீரப்புதல்வனே
நீ வாழும் இவ்வுலகில்
நாம் வாழ பெருந்தவம் செய்தோமே

ஈழத்தமிழரின் தேசியத்தலைவரே
உலகத்தமிழரின் அழியா முகவரியே
எமதினத்தின் வரலாற்று பொக்கிசமே

விளையாட்டு வயதிலே
இளமை பருவத்திலே
பொங்கி எழுந்தாயோ
புரட்சி தீயாய்

மட்டக்களப்பிலே தமிழீழமண்ணெங்குமே
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கண்டு
சீறி எழுந்தாயோ சிறுத்தைப் புலியாய்

தமிழினம் வாழும் இடமெங்கும்
விடுதலை விதையை விதைத்து
இன்று பெரு விருசு;சமாய் வளர்ந்து
எம்மை காத்து நிற்கும் மாபெரும் தலைவனே

மாவீரர் திருநாள்
எமதுயிர் தலைவர் பிறந்த மறுநாள்
உலகத்; தமிழினம் காத்திருக்கம் பெருநாள்

வன்னி மண்ணிலிருந்து
விடுதலைப் பேரொலியாய்
எமது தலைவரின் குரலொலிக்கும்
சிங்களப் படை நடுங்கும்
மகிந்தவின் தலைபிசகும்
உலகெங்கும் செய்தியறியும்
தமிழீழமெங்கும் புலிக்கொடி பறக்கும்

வீரத்தாய் பெற்றெடுத்த வீரத்திரு மகனே
வாழ்க தலைவரே வாழ்க பல்லாண்டு
வாழ்க வாழ்கவே


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner