-->

தமிழீழ உட்கட்டுமானங்கள்


*தமிழீழ மாவட்டங்கள்
{1}யாழ்ப்பாணம்
{சப்ததீவுகள் உட்பட}
{2}மன்னார்
{3}கிளிநொச்சி
{4}வவுனியா
{5}திருகோணமலை
{6}மட்டக்களப்பு
{7}அம்பாறை
{8}புத்தளம்
{9}முல்லைத்தீவு
*தமிழீழ உட்கட்டுமான
அமைப்புகள்
வழங்கற் பிரிவு
மருத்துவப் பிரிவு
கொள்முதல் பிரிவு
பரப்புரைப் பிரிவு
தமிழீழப் பொறியியற்றுறை
வெடிபொருள்
தொழில்நுட்பப் பிரிவு
கணிணி தொழில்நுட்பப்
பிரிவு
இலத்திரனியல்
தொழில்நுட்பப் பிரிவு
போர்கருவித்
தொழிற்சாலை
தமிழீழ இராணுவ
விஞ்ஞானக் கல்லூரி
விடுதலைப்புலிகளின்
ஆங்கிலக் கல்லூரி
திரைப்பட , புத்தக
மொழிபெயர்ப்புத் துறை
புலனாய்வுத் துறை
தமிழீழ
விடுதகலைப்புலிகளின்
அரசியற்றுறை
தமிழீழ விளையாட்டுத்
துறை
தமிழீழக்
கல்வி மேம்பாட்டுக்
கழகம்
தமிழீழக்
கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ நீதித்துறை
தமிழீழ நிர்வாக துறை
தமிழீழ நிதித் துறை
தமிழீழ வைப்பகம் (வங்கி)
தமிழீழக் காவல்துறை
விடுதலைப்புலிகளின்
சுகாதாரப் பிரிவு
சூழல் நல்லாட்சி ஆணையம்
தமிழீழ வனவளப்
பாதுகாப்புப் பிரிவு
தமிழீழப் பொருண்மிய
மேம்பாட்டு நிறுவனம்
பொருண்மிய மதியுரையகம்
தமிழீழக்
காலநிலை அவதானிப்பு
நிலையம்
தமிழீழக் காட்டுமானப்
பொறியியற்செயலகம்
வடகிழக்கு மனித உரிமைகள்
செயலகம்
ஓளிக்கலைப்பிரிவு (
நிதர்சனம், ஒளி வீச்சு)
விடுதலைப்புலிகளின்
வெளியீட்டுப் பிரிவு
புலிகளின் குரல்
( வானொலி)
விடுதலைப்புலிகள்
பத்திரிகை
எரிமலை சஞ்சிகை
தமிழீழத் தேசியத்
தொலைக்காட்சி
*தமிழீழபடையணிகள்
கடற்புலிகள்
வான்புலிகள்
லெப். கேணல் இராதா விமான
எதிர்ப்புப் படையணி
மாலதி படையணி (
பெண்புலிகள்)
சோதியா படையணி (
பெண்புலிகள்)
- மகளிர் படையணியில்
முதன் முதல் உருவாகிய
படையணி
அன்பரசி படையணி (
பெண்புலிகள்)
சிறுத்தைகள்
கரும்புலிகள்
கடற்கரும்புலிகள்
கேணல் கிட்டுப்
பீரங்கிப் படையணி
லெப். கேணல் விக்ரர்
கவசவாகன எதிர்ப்புப்
படையணி
லெப். கேணல்
குட்டிசிறி மோட்டார்ப்
படையணி
ஜெயந்தன் படையணி
சார்ள்ஸ்
அன்ரனி சிறப்புப் படையணி
இம்ரான் பாண்டியன்
படையணி
இம்ரான் பாண்டியன்
உந்துருளி அணி
எல்லைப் படை
துணைப்படை
*****

தேசியத்தலைவரின் எண்ணத்திலிருந்து


THALAIVAR SINTHANAIKAL *குட்டக் குட்டத்
தலைகுனிந்து அடிமைகளாக,
அவமானத்துடன் வாழ்ந்த
தமிழரைத்
தலை நிமிர்த்தி
தன்மாத்துடன்
வாழ வைத்த
பெருமை எமது விடுதலை
இயக்கத்தையே சாரும்.
*தமிழ் மக்களின்
சுதந்திரத்திற்காகவும்,
கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும்
தமது இன்னுரை அர்பணித்துள்ள
மாவீர்களான தியாகிகள் ,
காலம் காலமாக எமது இதயக்
கோவிலில் பூசிக்கப்பட
வேண்டியவர்கள் .
*எதிரியால்
ஆக்கிமிக்கபட்டிருக்கும்
எமது மண்ணை முதலில்
மீட்டெடுப்பது இன்றைய
வரலாற்றின் தேவை . இந்த
வரலாற்று நிர்ப்பந்தத்தை
நாம் தட்டிக்கழிக்க
முடியாது .
*தங்களது உயிர்களையும்,
உடமைகளையும் பாதுகாக்கும்
சக்திவாய்ந்த ஒரு தேசியப்
படையுடன்
இணைந்து சுதந்திரத்
தமிழீழத்தை நிறுவினாலெழிய,
ஒரு போதும் தமிழர்கள்
பாதுகாப்பாக இருக்கப்
போவதில்லை .
*விடுதலைப் போராட்டத்தில்
மக்கள் வெறும்
பார்வையாளராக இராது ,
நேரடிப் பங்காளிகளாக
மாறவேண்டும் .
*இது கரும்புலிகள்
சகாப்தம் , இடியும்
மின்னலுமாகப் புலிகள்
போர்க் கோலம் பூண்டு விட்ட
காலம் ***தமிழீழ
தேசியத் தலைவரின்
சிந்தனையிலிருந்து***
*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம் சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு
செய்து நிற்கின்றன .
*வீதிகளில், சந்துகளில்,
சுவர்களில் நாம்
சந்திக்கும்
மாவீரர்களது
திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு
காட்சி தருகின்றன.
*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால் எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம் .
*சத்தியத்திற்காய் சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப்
பிறவியும் சரித்திரத்தைப்
படைக்க முடியும் .
*மற்றவர்கள்
இன்புற்றிருக்க வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் , அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி - தந்திரம் -
துணிவு இந்த மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம் இல்லாமல்
மனித
வாழ்வில் அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச்
சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல் கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் , ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின் பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது.
*மக்களின் துன்ப
துயரங்களில் பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை.
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல் படி.
விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியற்ப் பாதை.
*இன்றைய காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான , புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும், கலையும்,
பண்பாடும் எமது நீண்ட
வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே
பிறக்கின்றது .
*மனித ஆன்மாவின் ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது
தமிழினத்தின்
தேசிய அன்மாவில் விழுத்திய
ஆழமான வடுக்கள் ஒருபோதும்
மாறப்போதில்லை .
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை , எந்தப்
புதிய சவாலையும் நாம்
சந்திக்கத் தயார் .
*மாவீரர்கள் காலத்தால்
சாவதில்லை . அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை
கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது
மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும் வரை, நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது
தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான், மனித
வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான் .
*நாம் தமிழீழப் பெண்
சமூகத்தின் மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை
நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப் போற்றுவதும்,
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு.
எமது சொந்தப் பலத்தில்
நாம் வேரூன்றி நிலையாக
நிற்பதால் , மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து
நிற்கமுடிகின்றது .
*அனைத்துத் தமிழ்
மக்களும்
ஒரே இனம் என்ற தேசாபிமான
உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள் ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு, சாதாரண மரண
நிகழ்வு அல்ல, எனது தேச
விடுதலையின் ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது
மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால் உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.
*கரும்புலிகள்
எமது இனத்தின் தற்காப்புக்
கவசங்கள் - எமது போராட்டப்
பாதையின் தடை நீக்கிகள் -
எதிரியின் படைபலத்தை மனப்
பலத்தால் உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள் .
*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் . இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின் நாம்
போராடியே ஆகவேண்டும் .
*நான் பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின்
வாழ்வே பெரியது .
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள்
அனுபவிக்க வேண்டும் .
*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல
அந்தச் சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர் உன்னத
இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை , அவனது உயிராக
இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து
விடுவதில்லை .
*தமிழீழ மண்ணில்
ஆயுதப்புரட்சி
இயக்கத்திற்கு
அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின் வீர மரபைச்
சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து
வளர்ந்திருக்கின்றது.
*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு
எதிராகப்
போராட வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி
நிற்பவர்களே அநீதியை
ஒழித்துத்துக்
கட்ட முன்வர வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப் புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச் சாத்தியமான
காரியமுமல்ல .

தமிழர் திருநாள் ​தைத்திருநாள் 14-01-2009

பொங்கல்
பண்டிகை பிறந்தது எப்படி?
January 14, 2010
எக்காலமாக இருந்தாலும்,
பொங்கல்
என்பது விவசாயத்துடன்
சம்பந்தப்பட்டதாக
இருந்துள்ளது என்பது மறுக்க
முடியாத உண்மை .
இது இன்று நேற்றல்ல.
இந்திரவிழா என்ற பெயரில்
இலக்கிய
காலத்திலேயே இருந்துள்ளது.
மணிமேகலையின் ஆரம்பமான
விழாவறை காதையில் “இந்திர
விழா’ என்ற பெயரில்
பொங்கல்
கொண்டாடப்பட்டது தெரிய
வருகிறது .
காவிரிபூம்பட்டினத்தில்
இந்த விழா சிறப்பாக
நடத்தப்பட்டுள்ளது . இந்த
விழா இப்போது தைப்பொங்கல்,
மாட்டுப்பொங்கல், காணும்
பொங்கல் என்ற
மூன்று நாட்களே நடக்கிறது.
அந்தக் காலத்தில் 28
நாட்கள் நடந்துள்ளதற்கான
சான்று இருக்கிறது .
அகத்திய முனிவர்
இந்திரனுக்கு அழைப்பு
விடுத்ததாகவும் அவன்
பூம்புகாருக்கு
வந்ததாகவும் தகவல் உண்டு.
முதன்முதலாக
இந்திரவிழா நடத்திய போது,
அதை நாட்டு மக்களுக்கு
தெரிவிக்க
முரசறைந்து பொது அறிவிப்பாக
அறிவித்தனர் .இப்போது
பொங்கலுக்கு ஊரையும்,
வீட்டையும் சுத்தம்
செய்து அலங்காரம்
செய்வது போல , அப்போதும்
நடந்துள்ளது. வீதிகளிலும்,
கோயில் வாசல்களிலும் பூரண
கும்பங்கள் வைக்கப்பட்டன .
பொன்னால் ஆன பாலிகைகளால்
நகரம் அலங்கரிக்கப்பட்டது.
பாக்கு,
வாழை மரத்தோரணங்கள்
கட்டப்பட்டன . அன்றையச்
செல்வச் செழிப்பிற்கேற்ப
தங்கத்தூண்களில்
முத்துமாலைகள் தொங்க
விடப்பட்டன . நகர
வீதிகளிலுள்ள பழைய
மணலை மாற்றி புதுமணல்
பரப்பினர் . கொடிகள்
கட்டப்பட்டன. காவல்
தெய்வங்கள் முதல் சிவன்
கோயில்கள்
வரை சிறப்பு பூஜைகள்
நடந்தன .இதையெல்லாம் விட
உயர்ந்த ஒரு தர்மம் இந்த
விழாவை ஒட்டி
பின்பற்றப்பட்டது .
ஒருவருக்கு யாரேனும்
பகைவர்கள் இருந்தால்,
அவர்களை விட்டு விலகிச்
சென்று விட
வற்புறுத்தப்பட்டது .
ஒரு நல்ல நாளில், தேவையற்ற
சண்டைகள்
வேண்டாமே என்பதற்காக
இவ்வாறு அரசு சார்பிலேயே
அறிக்கை விடப்பட்டது .
இவ்விழா நாளில் பகைமை, பசி,
நோய் நீங்க இறைவனிடம்
பிரார்த்தனை செய்யப்பட்டது
.
மழைக்குரிய தெய்வம்
இந்திரன் . அவனை வழிபட்டால்,
மாதம்
மும்மாரி பெய்து பயிர்
பச்சை செழிக்கும் என
மக்கள் நம்பினர் .
பிற்காலத்தில், சூரியனைப்
பற்றிய
அறிவு மக்களுக்கு வந்தவுடன்
, சூரியனே சீதோஷ்ணத்தை
நிர்ணயிப்பவர் என்ற
நம்பிக்கை வந்து , தங்கள்
கண் முன் காட்சி தரும்
அந்த கடவுளுக்கு பொங்கல்
படைத்து வழிபட்டனர் .
தங்கள்
விளைச்சலுக்கு காரணம்
அவரே என நம்பினர் . பூமியில்
இருக்கும்
நீரை ஆவியாக்கி மேலே கொண்டு
சென்று , ஒன்றுக்கு பத்தாக
மழை பெய்விப்பவர் என்ற
ரீதியில் இந்த நன்றியறிதல்
தெரிவிக்கப்பட்டது .
தாங்கள் அறுவடை செய்த
புதுநெல்லை தை முதல்நாளில்
சமைத்ததால் , இந்திர
விழா என்ற பெயர் பொங்கல்
என மாறியது

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner