-->

வல்வை மண் ​தந்த வீரத்தமிழ்ப்பொட்டு கேணல் கிட்டு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

வல்வை மண் தந்த-

வீரத் தமிழ்ப் பொட்டு!
வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன்
- அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்று ஆன பின்னும்
தன் பணியை மண் பணியாய் தன் நெஞ்சில் சுமந்தான் -
தன் நலம் விட்டு! தலைவனுக்கு ஒரு கையாய் தமிழ் மண்ணிற்கோ தளபதியாய் நிலை
இழந்த மக்களிற்கு நீதிபதியாய் கலையுள்ளம் கொண்ட காளை - இவன் வாழ்ந்த
காலமதோ மிக மட்டு !

தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல தன் பெண்ணையும் துறந்திங்கு அந்நிய
மண்ணில் அவனிருந்தாலும் எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!
மண்ணைப் பொன்னாக்க அவன் செய்த புண்ணியங்கள் ஆயிரம் ஆயிரம் !
இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -
பன்னிரண்டு ஆண்டுகள்! நெஞ்சம் மகிழ........
தன் மண் நோக்கிப் புறப்பட்ட மாவீரன்!
என்ன நினைத்திருப்பான்?
வங்கக் கடலலையும் வழியனுப்பி வாழ்த்திசைக்க -
இந்தியமோ - இன்னோர் இழிசெயலை இருளில் திணித்து விட நம் வீரர் தமக்காக
வாழ்பவரல்லவே!

திண் வீரர் - மண் காக்க - விண்ணை உடைத்தொருகால் வீர இடிமுழங்க -
தண்ணென்ற நீரலையில் தம்மைக் கரைத்தனரே!
விண் வீரன் -

கிட்டு நீ எங்கள் காவிய நாயகன் .

{மீள்பதிவு



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner