-->

தமிழர் திருநாள் ​தைத்திருநாள் 14-01-2009

பொங்கல்
பண்டிகை பிறந்தது எப்படி?
January 14, 2010
எக்காலமாக இருந்தாலும்,
பொங்கல்
என்பது விவசாயத்துடன்
சம்பந்தப்பட்டதாக
இருந்துள்ளது என்பது மறுக்க
முடியாத உண்மை .
இது இன்று நேற்றல்ல.
இந்திரவிழா என்ற பெயரில்
இலக்கிய
காலத்திலேயே இருந்துள்ளது.
மணிமேகலையின் ஆரம்பமான
விழாவறை காதையில் “இந்திர
விழா’ என்ற பெயரில்
பொங்கல்
கொண்டாடப்பட்டது தெரிய
வருகிறது .
காவிரிபூம்பட்டினத்தில்
இந்த விழா சிறப்பாக
நடத்தப்பட்டுள்ளது . இந்த
விழா இப்போது தைப்பொங்கல்,
மாட்டுப்பொங்கல், காணும்
பொங்கல் என்ற
மூன்று நாட்களே நடக்கிறது.
அந்தக் காலத்தில் 28
நாட்கள் நடந்துள்ளதற்கான
சான்று இருக்கிறது .
அகத்திய முனிவர்
இந்திரனுக்கு அழைப்பு
விடுத்ததாகவும் அவன்
பூம்புகாருக்கு
வந்ததாகவும் தகவல் உண்டு.
முதன்முதலாக
இந்திரவிழா நடத்திய போது,
அதை நாட்டு மக்களுக்கு
தெரிவிக்க
முரசறைந்து பொது அறிவிப்பாக
அறிவித்தனர் .இப்போது
பொங்கலுக்கு ஊரையும்,
வீட்டையும் சுத்தம்
செய்து அலங்காரம்
செய்வது போல , அப்போதும்
நடந்துள்ளது. வீதிகளிலும்,
கோயில் வாசல்களிலும் பூரண
கும்பங்கள் வைக்கப்பட்டன .
பொன்னால் ஆன பாலிகைகளால்
நகரம் அலங்கரிக்கப்பட்டது.
பாக்கு,
வாழை மரத்தோரணங்கள்
கட்டப்பட்டன . அன்றையச்
செல்வச் செழிப்பிற்கேற்ப
தங்கத்தூண்களில்
முத்துமாலைகள் தொங்க
விடப்பட்டன . நகர
வீதிகளிலுள்ள பழைய
மணலை மாற்றி புதுமணல்
பரப்பினர் . கொடிகள்
கட்டப்பட்டன. காவல்
தெய்வங்கள் முதல் சிவன்
கோயில்கள்
வரை சிறப்பு பூஜைகள்
நடந்தன .இதையெல்லாம் விட
உயர்ந்த ஒரு தர்மம் இந்த
விழாவை ஒட்டி
பின்பற்றப்பட்டது .
ஒருவருக்கு யாரேனும்
பகைவர்கள் இருந்தால்,
அவர்களை விட்டு விலகிச்
சென்று விட
வற்புறுத்தப்பட்டது .
ஒரு நல்ல நாளில், தேவையற்ற
சண்டைகள்
வேண்டாமே என்பதற்காக
இவ்வாறு அரசு சார்பிலேயே
அறிக்கை விடப்பட்டது .
இவ்விழா நாளில் பகைமை, பசி,
நோய் நீங்க இறைவனிடம்
பிரார்த்தனை செய்யப்பட்டது
.
மழைக்குரிய தெய்வம்
இந்திரன் . அவனை வழிபட்டால்,
மாதம்
மும்மாரி பெய்து பயிர்
பச்சை செழிக்கும் என
மக்கள் நம்பினர் .
பிற்காலத்தில், சூரியனைப்
பற்றிய
அறிவு மக்களுக்கு வந்தவுடன்
, சூரியனே சீதோஷ்ணத்தை
நிர்ணயிப்பவர் என்ற
நம்பிக்கை வந்து , தங்கள்
கண் முன் காட்சி தரும்
அந்த கடவுளுக்கு பொங்கல்
படைத்து வழிபட்டனர் .
தங்கள்
விளைச்சலுக்கு காரணம்
அவரே என நம்பினர் . பூமியில்
இருக்கும்
நீரை ஆவியாக்கி மேலே கொண்டு
சென்று , ஒன்றுக்கு பத்தாக
மழை பெய்விப்பவர் என்ற
ரீதியில் இந்த நன்றியறிதல்
தெரிவிக்கப்பட்டது .
தாங்கள் அறுவடை செய்த
புதுநெல்லை தை முதல்நாளில்
சமைத்ததால் , இந்திர
விழா என்ற பெயர் பொங்கல்
என மாறியது

26-DECEMBER-2009

26-DECEMBER-2004 அன்று ஆசிய கண்டத்தில் சுமார் 13 நாடுகளைதாக்கி,2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை பலிகொன்று, பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம்,கோடிக்கணக்கான சொத்துக்களை தாக்கி அழித்த ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது. இவ்அனர்த்தத்தில் வரலாற்றிலேயே அதிக அளவு மக்களை பலிகொண்ட இயற்கை அனர்த்தமாக இது பதிவுசெய்யப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்தில் அத்தனை மனித உயிர்களையும் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
இறந்த மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
இன்று
26-DECEMBER-2009

செல்பேசியில் இணையம்

செல்பேசியின் மூலம் அதிவேகமாக இணையம் உபயோகிக்க
செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். ஆனால் செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.முக்கியமாக அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்து முகவரிகளையும் பார்க்க இயலாது. இந்த குறைகளை போக்குவதற்கு என்றே தயாரிக்கப்பட்டது தான் ஒபோரா மினி என்னும் மென்பொருள். இதன் மூலம் நீங்கள் கணினியில் அப்படி இணையத்தை பயன்படுத்துகிறீர்களோ அதை போலவே உங்கள் செல்பேசியிலும் உபயோகிக்கலாம். கீழே உள்ள முகவரிக்குச் சென்று உங்கள் செல்பேசியின் நிறுவனத்தை (model) தேர்வு செய்து தரவிக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணினி நேரடியாக தரவிறக்கம் செய்து விட்டு பின்பு உங்கள் செல்பேசிக்கு cable அல்லது bluetooth மூலமாக upload செய்து உபயோகியுங்கள்

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner