-->

தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய்




தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய் - விடு
தலையதனை உதயமாக்கும் இரவியாகுவாய்
அலையெனவே மறத்தமிழர் திரண்டு நிற்கிறோம் - உம்
அடுத்த அடி வெற்றிக் கொடி சூளுரைக்கிறோம்

சிறுவயதில் ஏசுவாக கொடுமைகள் கண்டாய் - பின்
வீறு கொண்டு சிவகுருவாய் எதிரியழித்தாய்
இடையினிலே புத்தனாக சாந்தம் உடுத்தினாய் - இனி
கடைசியிலே கொள்ளும் அவதாரம் என்னவோ?

களத்தினிலே உம்முருவாய் வீரர் போரிட -சிங்
களத்தவர்கள் கதறியோடும் காட்சி நாம் கண்டோம்
அளப்பெரிய சாதனைகள் நிறைய நிகழ்ந்தன - எமது
இழப்பதனை ஈடுசெய்ய ஈழம் முகிழணும்

உம்மைப் போன்ற தலைவர் யார்க்கும் வாய்த்திடமாட்டார் - எம்
தெம்பைக்கூட்டி உணர்வை ஊட்ட முன்வரமாட்டார்
இம்மையில் நாம் ஈழமெனும் சுவர்க்கம் கண்டிட - நீர்
இருக்கையிலே(யே) ஈழம் கண்டு வளப்படுத்தணும்

அகவையிலே ஐம்பதுகள் தொட்டுவிட்டாலும் - எம்
அக அவையில் துடிப்புமிகு இளவரசர் நீர்
சுகமான சுமை தாங்கும் சூரிய தேவா - நீர்
யுகமாகி புகழோங்க வாழ்ந்திட வேண்டும்

தன்மானத்தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!, வாழி!! நீடூழி!




ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத்
தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும்
போதே வரலாறு தந்தவன் மானத்தோடு
எம்மை தலை நிமிரச் செய்தவன்!

எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன்
ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்!
கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும்
தூசென்று காட்டி நிற்கும் தீரனே!

தரையோடு தொடங்கினாய் இயக்கம்!
இன்று வான், தரை,கடலெங்கும்
தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும்
ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்!

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்


{காணொளி}





கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ..

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ....

தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்




--------------------------------------------------------------------------------
நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.


நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.


மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

இருபதாவது வருடத்தில் புலிகளின் குரல் வானொலி

இருபதாவது வருடத்தில்
புலிகளின்
குரல் வானொலி 1990 ஆம் ஆண்டு மாவீரர் வார தொடக்க
நாளான 21 நவம்பர் அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழதேசியத்தலைவர்அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது
புலிகளின் குரல்
வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழமக்களின்உரிமைக்குரலாகவும் ,எதிரியின்பொய்மைகளுக்கு எதிரானஉண்மைக்குரலாகவும்
ஓங்கி ஒலிக்க
வேண்டும் என்ற
முனைப்போடும் ,
விருப்போடும்
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களால்
நவம்பர் 21, 1990

கல்லறை மேனியர் கண்திறப்பார்களே- மாவீரர் கானம் {காணொளி




கல்லறை மேனியர் கண்
திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர்
கண்திறந்து சின்ன
புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

மன்னவரை பாடுதற்கு இந்த
ஜென்மம்
போதவில்லை
கல்லறையில்
போடுதற்கு கோடி மலர்
பூக்கவில்லை
கோடி மலர்
பூக்கவில்லை

வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27

 


1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

தமிழீழக்காவல் துறை ஆரம்பி்க்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் 19-11-1991



தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன.



TAMILEELAM


பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் 1967 - 2.11.2007

 

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 02-11-2011

 


மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்



 











பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் 1967 - 2.11.2007

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.
http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg
மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner