-->

ஓயாதஅலைகள் 3 கட்டம் 1 <01/11/1999>

ஓயாத அலைகள் 3     ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலச் சமர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும்.     ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச- 1 ,2 ,3 ,4 , றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்களக்குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.     யாழ்ப்பாணத்தை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை 'ஓயாத அலைகள் ஒன்று' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன.       படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ- 9 அல்லது கண்டிவீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகள் வசமிருந்தன. யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ- 9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் ' ஜெயசிக்குறு' என்ற பெயரில் மே 13. 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஆனையிறவு வரையான ஏ- 9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். அந்நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர் புரிந்ததால் வன்னிப்பரப்பில் பல கடுமையான சமர்கள் நடைபெற்றன. அந்நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பாதையை சிறிலங்கா அரசதரப்பினர் கைப்பற்றிக் கொண்டனர்.     பின்னர் டிசம்பர் 5 1998 அன்று சிறிலங்கா அரசபடையினர் 'றிவிபல' என்ற பெயரில் நடவடிக்கையொன்றைச் செய்து மாங்குளத்துக்கும் ஏ- 9 நெடுஞ்சாலைக்கும் கிழக்குப் பக்கமாகவுள்ள ஒட்டுசுட்டான் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றைய தினமே 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக சிறிலங்கா அரசபடைத்தரப்பு அறிவித்தது. ஏ- 9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை அமைக்கும் முயற்சியை சிறிலங்கா அரசபடைகள் கைவிட்டதற்கு, விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலும் அதனால் சிறிலங்கா அரசபடைக்கு ஏற்பட்ட இழப்புக்களுமே காரணம் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.     பின்னர், மன்னாரிலிருந்து பூநகரி வரையான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு நிலப்பகுதியைக் கைப்பற்றி மேற்குக் கடற்கரையோரமாக யாழ்ப்பாணத்துக்கு வினியோகப் பாதையை ஏற்படுத்துவதென சிறிலங்கா அரசபடை திட்டமிட்டது. அதன்படி ' ரணகோச' என்ற பெயரில் தொடரிலக்கங்களுடன் பெரியதொரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. ஒன்று, இரண்டு எனத் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட ரணகோச இராணுவ நடவடிக்கையில் சிறிலங்கா அரசபடைத்தரப்பு 'பள்ளமடு' என்ற இடம்வரை முன்னேறியது. பள்ளமடுவில் பல சண்டைகள் நடந்தாலும் அக்கிராமத்துக்கு அப்பால் சிறிலங்கா அரசபடை முன்னேறவில்லை.     இந்நிலையில் 1999 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் ஏ- 9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் புறமாக 'அம்பகாமம்' என்ற இடத்தில் 'வோட்டர் செட் - 1 , 2 ' என்ற பேரில் இரண்டு இராணுவ முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.       ஓயாத அலைகள் மூன்று - கட்டம் ஒன்ற நவம்பர் 1, 1999 அன்று நள்ளிரவு 'ஓயாத அலைகள் மூன்று' இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது. 'றிவிபல' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடைகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்த ஒட்டுசுட்டான் கூட்டுப்படைத்தளம் மீது முதலாவது தாக்குதல் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுங்கேணி, அம்பகாமம், கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், விளக்குவைத்த குளம் போன்ற 'ஜெயசிக்குறு' நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளும், 1985 ஆம் ஆண்டு தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுச் சிங்களக் குடியேற்றமாகவும் இராணுவத் தளமாகவும் மாற்றப்பட்டிருந்த சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற நிலப்பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.     தாக்குதல் தொடங்கி ஐந்தாம்நாள் (நவம்பர் 5. 1999) ஏ- 9 பாதையில் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முதற்கட்டம் முடிவுக்கு வந்தது.   அடுத்து  

போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாகச்செயற்பட்ட தலைவனும்

போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாகச்செயற்பட்ட தலைவனும்

ஒற்றுமையின் சிகரமே மாவீரர்கள்

மாவீரர்கள் இருள் விலக்கும் வெளிச்சம்

மாவீரர் நாள் {கார்த்திகை27}

மாவீரர் நாள் (கார்த்திகை 27) இந்திய தமிழீழப்போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப்புலிப் போராளி வீரச்சாவு அடைந்த நாளான ~கார்த்திகை 27 ~ஐ ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போது, 'எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டா1டுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோhம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த ~சங்கரின்~ நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர் களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம். அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்களை புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.

உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்

1989 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை... "எங்களுருக்கு மீண்டும் செல்வோம்" "அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்" " நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல." "போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு..." என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன. இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன. சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம். ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவுp போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது. லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது. அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு. அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது. இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான். இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது. பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10. 10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன. அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன. சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம். எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும். ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர். வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை. மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும் 1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரி பால்ராஜ் {காணொளிகள்}

பிரிகேடியர் பால்ராஜ்

(27-நவம்பர்-1965 - 20-மே-2008
இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா
கொக்குத்தொடு வாய்
முல்லைத்தீவு)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.

தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர்

1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்

1991 ஆம் ஆண்டு தொடக்கம்1993 ஆம் ஆண்டு வரையும்

பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம்1997 ஆம் ஆண்டு வரையும்

விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்
முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்

மேலும் படிக்க

http://bit.ly/c9TO3i


. . . . . . . . . . . . . . . . .


காணொளிகள்


மீளும் நினைவுகள் 1
http://bit.ly/dn2aSx

மீளும் நினைவுகள் 2
http://bit.ly/dbwKhF

மீளும் நினைவுகள் 3
http://bit.ly/bl7jDu


இறுதி அஞ்சலி 1
http://bit.ly/c6Ip3h

இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aB7zaE

இறுதி அஞ்சலி 3
http://bit.ly/cC3gZ3

பிரி பால்ராஜ் நினைவக கானம்
http://bit.ly/cfL1KM


மக்கள் முன் உரையாற்றும்
பிரி பால்ராஜ்
http://bit.ly/dh7UKN

பிரி விதுஷா,,, துர்க்கா {காணொளிகள்

பிரிகேடியர் துர்க்கா

சோதியா படையணி சிறப்புத்தளபதி

பொன்னுத்துரை கலைச்செல்வி

<24/03/1971 - 03/04/2009 >

வலிகாமம் யாழ்ப்பாணம்


நினைவகத் தொகுப்பு
காணொளி

பாகம் 1
http://bit.ly/9scw2R

பாகம் 2
http://bit.ly/9EczZV

பாகம் 3
http://bit.ly/bQuxyN

* * * * * * *
* * * * * * *


பிரிகேடியர் விதுஷா

நினைவுத்தொகுப்பு

காணொளி

http://bit.ly/ajeTnu

நினைவக கானம்
http://bit.ly/dgEIZ3

பிரிகேடியர் தீபன் {காணொளிகள்

பிரிகேடியர் தீபன்

(வேலாயுதபிள்ளை
பகீரதகுமார்)

கிளிநொச்சி கண்டாவளை

08/01/1966 - 04/04/2009


நினைவுத் தொகுப்பு

காணொளி
பாகம் 1
http://bit.ly/a1zq2D

பாகம் 2
http://bit.ly/att9bo

பாகம் 3
http://bit.ly/degli9

பாகம் 4
http://bit.ly/c9ykgB


பிரிகேடியர் தீபன் ஈகைச்சுடர் ஏற்றுதல்
http://bit.ly/aFUlY7


பிரிகேடியர் தீபன்
நினைவக கானம்
http://bit.ly/c0Qiwm

லெப் கேணல் திலீபன்

லெப்டினன்
கேணல்
தியாகதீபம்
திலீபன்


தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றிலே
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
யாழ் . மாவட்ட
அரசியற்
பிரிவுப்
பொறுப்பாளர்
திலீபன்
அவர்கள் ,
15.09.1987
அன்று ,
நல்லூர்க்
கந்தசாமி கோயிலின்
முன்பாக ,


ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச்
சாகும்
வரையிலான
உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்தார் .


இந்திய
வல்லாதிக்கத்
தின் கண்களைத்
திறப்பதற்காக
அவர் மேற்கொண்ட
அந்தத் தியாகப்
பயணத்தில்,

12 நாட்கள்
ஒரு சொட்டு நீர்
கூட
அருந்தாமல் ,
மனக்கட்டுப்பாட்டுடன்
இருந்து ,
தமிழ் பேசும்
மக்களின்
விடுதலைத்
தீயைக்
கொழுந்து விட்டு எரியச்
செய்தபின் ,


26. 09.1987
அன்று ஈகச்சாவு அடைந்தார்.

காணொளிகள்

திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 1
http://bit.ly/aZYQgA


திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 2
http://bit.ly/djce5u


திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 3
http://bit.ly/ahuu5m

தியாகி திலீபன் 1
http://bit.ly/9Tb2MG


தியாகி திலீபன் 2
http://bit.ly/dsYNRT

திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 1
http://bit.ly/aFT07U

திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 2
http://bit.ly/bWbTlX

திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 3
http://bit.ly/dC8GIk

திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 4
http://bit.ly/9R3chc

திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 5
http://bit.ly/cPX9UY

திலீபன் அண்ணா வரலாற்று உரை
http://bit.ly/cvGbDa


தியாகதீப நினைவுநாளில் தலைவர்உரை
http://bit.ly/9exV5J

திலீபன் அண்ணா நினைவக கானம்

"நல்லூர் வீதியில்"
http://bit.ly/bXafqk


திலீபன் அண்ணா நினைவக கானம்

"மூச்சிழுக்கும் நேரமெல்லாம்"
http://bit.ly/beP4Qy

3ஆம் ஆண்டு நினைவில் எல்லாளன் நடவடிக்கை

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி மூன்றாம்
ஆண்டு நினைவுநாள்
22-
ஒக்டோபர்-2010

தமிழீழ
விடுதலைப்
போராட்ட
வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய
நாளாக 2007 ஆம்
ஆண்டு காணப்படுகின்றது

தமிழ் மக்களின்
விடுதலைப்போராட்டம்
தொடக்க
காலத்தில்
கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்
வளர்ச்சிப்படிகளில்
பல
திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின்
ஒரு இனத்தின்
விடுதலைக்காக
போராடும்
போராட்டமாக பல
கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய
காலகட்டத்தில்

2007 ஆம்
ஆண்டு பத்தாம்
மாதம் 22 ஆம்
நாள்
விடுதலைப்புலிகளின்
பரிணாம
வளர்ச்சியின்
ஒரு படிக்கல்லான
தாக்குதலாக
சிங்களபடையின்
குகை என்றும்
வான்படை தரைப்படையினை கொண்ட
அனுராதபுரம்
வான்படைத்தளத்தில்
தரைவழியாக
நகர்ந்து சென்று தாக்குதல்
தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின்
இருபதிற்கு மேற்பட்ட
வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரிய
சேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்திய
வீரவரலாறான 21
சிறப்பு கரும்புலி மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டு 22-
ஒக்டோபர்-2010ல்
நினைவுகூரப்படுகிறது

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களின்
நேரடி வழிகாட்டலில்
உருவான
கரும்புலிகள்
அணி இறுதியாக
தலைவர்
அவர்களுடன்
உணவருந்தி படம்
எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக
தமிழீழத்தின்
எல்லைப்பகுதிகள்
ஊடாக
கரடு முரடான
பதையினையும்
பள்ளத்தாக்கினையும்
கடந்துசென்று அனுராதபுரம்
என்ற
சிங்களவனின்
குகைக்குள்
சென்று அங்கு தரித்து நின்ற
வான்கலங்கள்
அனைத்திற்கும்
தீ முட்டிய
அந்த தீராத
வீரர்களை நினைவிற்
கொள்கின்றோம்

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
பெயர்சூட்டி வைக்கப்பட்ட
நடவடிக்கைதான்
இந்த எல்லாளன்
நடவடிக்கை.

அனுராதபுர
வான்படைத்தளத்தில்
21
சிறப்பு கரும்புலிகளின்
நெஞ்சில்
எரிந்த
விடுதலைத் தீ
அன்று அந்த
விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது

சிங்களப்
படையின்
உதவிக்கு வந்த
உலங்கு வானூர்தியும்
விடுதலைப்புலிகளால்
சுட்டுவீழ்த்தப்படுகின்றது.


இந்த எல்லாளன்
சிறப்பு நடவடிக்கையில்
சிறப்பு கரும்புலிகளான

*லெப் .கேணல்
வீமன்

*லெப்.கேணல்
இளங்கோ

*மேஜர்
மதிவதனன்

*கப்டன்
தர்மினி


*கப்டன்
புரட்சி


*மேஜர்
சுகன்


*மேஜர்
இளம்புலி


*மேஜர் காவலன்


*கப்டன்
கருவேந்தன்


*கப்டன்
புகழ்மணி


*மேஜர்
எழிலின்பன்


*கப்டன்
புலிமன்னன்


*கப்டன்
அன்புக்கதிர்


*கப்டன்
சுபேசன்


*கப்டன்
செந்தூரன்


*லெப்ரின்
அருண்


*கப்டன்
பஞ்சசீலன்


*மேஜர்
கனிக்கீதன்


*கப்டன்
ஈகப்பிரியா


*கப்டன்
அருள்மலர்


*கப்டன்
ஈழவேந்தன்

ஆகிய
சிறப்பு கரும்புலிகள்
வீரவரலாறானார்கள்
இந்த
மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டில் 22-
ஒக்டோபர்-2010
நினைவிற்கொள்கின்றோம்

இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் "எல்லாளன் நடவடிக்கை

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். "எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்" இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது. "வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவோம்." இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள். அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. "நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்." தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் "அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?" என இளம்புலி கேட்டான். "நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக் கொள்ளுங்கோ." தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது. நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் "பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?" என்று கேட்டார். "இல்லையண்ணை. இனித்தான்..." "அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ." அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள்.  தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் சிரிப்பு. இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். "நாங்கள் இறங்கப்போறம். இப்ப தொடர்பிருக்காது. விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான் தொடர்பெடுப்பன்." இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன் உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு தெரியப்படுத்தினார்கள். நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத் தயாராயிருந்தது. உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில் இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து நின்றான். பயப்பீதியால் "டோ... டோ..." என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான். அத்தோடு அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது. சுபேசனின் ' லோ' முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச் சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான அநுராதபுரத்துக்குள் தொடங்கியது. எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில் அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள் தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி விரைந்தார்கள். வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ. 24 ரக உலங்கு வானுர்தி தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும் சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல் மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால் என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில் அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக் களங்களில் எதிரியைப் பந்தாடியவன். வன்னியில் நடந்த புகழ்பெற்ற சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது. ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ் சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப் படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும் வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ. இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள் கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத் தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில் பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா அசைந்து கொடுப்பான்? அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது. பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும் அமைத்து விட்டு 'முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்' என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு 'முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்' என்ற சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள். இந்த விமானங்கள் மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம் ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத் தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள் தானே. இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டும

எல்லாளன் நடவடிக்கை மூன்றாண்டு நினைவு 22-10-2010


எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள். இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.   லெப்.கேணல் இளங்கோ – அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.   லெப். கேணல் வீமன் – பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் -  யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.   லெப்.கேணல் மதிவதனன் – என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்- பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். மேஜர் இளம்புலி – இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு, கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச. நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன், கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.   அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்.             இளந்தீரன்

கேணல் ராயூ {காணொளிகள்}

கேணல் ராயூ


கேணல் ராயூ

நினைவுத் தொகுப்பு 1
http://bit.ly/dngt2h


கேணல் ராயூ
நினைவுத் தொகுப்பு 2
http://bit.ly/bust77


கேணல் ராயூ இறுதி அஞ்சலி 1
http://bit.ly/a4OL5h


கேணல் ராயூ இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aBE8hR


கேணல் ராயூ இறுதி அஞ்சலி 3
http://bit.ly/9Mmv8f

மாவீரர் நாள் கார்த்திகை27 <காணொளிகள்

மாவீரர் நாள்
நவம்பர்
27

உலகத்
தமிழின
விடுதலைக்காக
தனது
இன்னுயிரை
ஈகம்
செய்திருக்கின்ற
ஆயிரமாயிரம்
வீரவேங்கைகளை
நினைவு கூறும்
நாள் .

தமிழீழ
விடுதலைப்
போரில் முதல்
களச் சாவடைந்த
இயக்கவீரர்
லெப்டினன்
சங்கரின்
( சத்தியநாதன்)
நினைவு நாளான
நவம்பர் 27-ஆம்
நாளை பொதுவான
நாளாகத்
தேர்ந்தெடுத்
து
1989- ஆம்
ஆண்டில்
தலைவர்
அவர்கள்
மாவீரர் நாளை
அறிவித்தார் .

1989- ஆம்
நாளை முதலாவது
தமிழீழ
மாவீரர்
நாளாகத்
தமிழ் மக்கள்
உணர்வார்ந்த
நிலையில்
கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து
தமிழீழத்தின்
மிகப்பெரிய
நினைவுகூரும்
நிகழ்வாகத்
தமிழீழ
மாவீரர் நாள்
நினைவு கூரப்பட்டு வருகின்றது .


காணொளிகள்

{1}
தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றில் முதல்களப்பலி
லெப்டினன் சங்கர்
ஒரு பதிவு
http://bit.ly/czD1lT


{2}
தமிழீழதேசியத்தலைவர் அவர்கள்
லெப்டினன் சங்கருடனான
நாட்களை பகிர்ந்து கொள்கிறார்
http://bit.ly/aeAool


{3}
நவம்பர் 27 ஒரு பதிவு
http://bit.ly/9WSWUO


{4}
கார்த்திகைப்பூ
http://bit.ly/ctCmbP


{5}
மாவீரர் நாளின் தோற்றம்
http://bit.ly/agtkNT


{6}
மாவீரர் துயிலும் இல்லம் 1
http://bit.ly/ckkBgV


{7}
மாவீரர் துயிலும் இல்லம் 2
http://bit.ly/awuugg


{8}
மாவீரர் நாள் தோற்றம்
http://bit.ly/agtkNT


{9}
மாவீரர் நாளில் ஈகைச்சுடர் ஏற்றும்போது இசைக்கப்படும் கானம்
http://bit.ly/aV9HtW


***********


மாவீரர் நாள் குறித்ததான
கட்டுரை ஆக்கங்கள்
. . . . . . . . . . . . . . . . . .

{1}
மயானங்கள் புனிதமாகும் மாவீரர் நாள்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_8816.html


{2}
லெப் சங்கர்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_19.html


{3}
மாவீரர் நாள் நவம்பர் 27
http://vrojan.blogspot.com/2010/10/27.html

மாவீரர் ஆலயங்கள் புனிதமாகும் மாவீரர் நாள்


 v.rojan



நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல் அது. மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா குழியினுள் வாழ்பவரே எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம் அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம் எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது. வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காகச் சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என்று அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல்.. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டுக் கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும். (ஒளிப்படம் கஜானி) துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை ( உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்பதில்லை விதைக்கிறார்கள். வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாகக் கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும். தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும். தோழர்களை உற்சாகப்படுத்தும். உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான். இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்கள அரசுபடைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது. ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது. எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது. சொல்லுங்கள் உறவுகளே?    

லெப்டினன் சங்கர் <மாவீரர் நாள்


லெப். சங்கர் லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்- கம்பர்மலை) வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961 ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா? தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். 'ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான். 1978 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக. .. சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது. இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான். 1982 ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர், வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர். 1982 இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள். முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது. 27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப் பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது. இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000க்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கி உள்ளனர். இம் மாவீரர்களை எல்லாம் நினைவு கூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப் பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று

மாவீரர் நாள் கார்த்திகை 27


மாவீரர் நாள் இன்று நவம்பர் 27 உலகத் தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வேங்கைகளை நினைவு கூறும் நாள். அவர்கள் அங்கே புதைக்கப்படவில்லை, மாறாக ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கின்றனர். தனது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்குத் தனது இன்னுயிரை நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை பத்து,நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது.எனவே, அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த இயக்கவீரர் லெப்டினன் சங்கரின்(சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27-ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்து 1989-ஆம் ஆண்டில் தலைவர் அவர்கள் மாவீரர் நாளை அறிவித்தார். 1989- ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்படும். நடுகற்கள் நாட்டப்படும் வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு, அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப் படுகின்றனர். மாவீரர் நினைவாக பின்பற்றப்படும் நாட்கள் 1 . கடலிற் காவியமான கிட்டு உட்பட பத்து வே ங்கைகள் நினைவாக 16.01.1993 2. அன்னை பூபதி அம்மா நினைவு நாள், மார்ச்சு மாதம் 19-நாள் தொடக்கம், ஏப்பிரல் மாதம் 19-நாள் வரை 3. கரும்புலிகள் நாள் 05.07.1987 4. தியாக தீபம் திலீபன் நினைவுநாள். செப்தம்பர் 15-ஆம் நாள் தொடக்கம் செப்தம்பர் 26-ஆம் நாள் வரை. 5. குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நச்சுக்குப்பி கடித்து வீரச்சாவடைந்த நாள் 05.10.1987 6. தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈய்ந்த முதற் பெண்புலி மாலதி( தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்) 10.10.1987 7. மாவீரர் நாள், நவம்பர் 25 தொடக்கம் 27 வரை

தாயக கனவுடன் <மாவீரர் நாள் பாடல்

மொழியாகி
எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும்
தமிழ்மீது
உறுதி !

வழிகாட்டி
எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு
மீதிலும்
உறுதி !

விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கை
வீரர்கள்
மீதிலும்
உறுதி!

இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொருசத்தியம்
செய்கின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்

உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்

அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்

அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்

உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்

தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்

தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்

எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்

எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே


http://bit.ly/cCIWaA


கானவரிகள்:- புதுவைரத்தினதுரை

பாடியவர் :- வர்ணராமேஸ்வரன்

தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாறு <காணொளி

தமிழீழ

விடுதலைப்போராட்ட

வரலாற்றில்
நடைந்தேறிய
ஆரம்பகால
முக்கிய
சம்பவங்கள் ,
தமிழீழ
விடுதலைப்போராட்டம்
தொடங்குவதற்கான
காரணங்களை ,
பலதரப்பட்ட
சான்றோர்களின்

நேரடி நேர்காணல்கள்
மூலமாக ,

""தலைநிமிர்வு""
என்று தலைப்பிடப்பட்டு
தேசியத்தலைவரின்

50 வது பிறந்தநாள்
ஆண்டில் ,

தமிழீழ
விடுதலைப்புலிகளின்
உத்தியோகபூர்வ
ஒளிக்கலப்படப்பிரிவான
" நிதர்சனம்"
நிறுவனத்தால்
வெளியிடப்பட்டது .

காணொளி

பாகம் 01
http://2tag.nl/Z2L9F7 -

பாகம் 2
http://2tag.nl/605747 -

பாகம்3
http://2tag.nl/Z130W9 -

பாகம் 4
http://2tag.nl/33022Z -

பாகம் 5
http://2tag.nl/YI7732 -

பாகம் 6
http://2tag.nl/M98TF0 -

பாகம் 7
http://2tag.nl/AOKVAU -

பாகம் 8
http://2tag.nl/I7M0Y0 -

பாகம் 9
http://2tag.nl/481M4E -

பாகம் 10
http://2tag.nl/4U9618 -

பாகம் 11
http://2tag.nl/03420U -

. . . . . . . .

தேசியத்தலைவர் போராட்ட வரலாறு <காணொளி

மேதகு தேசியத்

தலைவர்

அவர்களின்
போராட்டவரலாறு -
விடுதலைத்தீப்பொறி
காணொளியில்

பாகம் 1
http://2tag.nl/H3VOJ1 -

பாகம் 2
http://2tag.nl/84T816 -

பாகம் 3
http://2tag.nl/127M09 -

பாகம் 4
http://2tag.nl/7769C2 -

பாகம் 5
http://2tag.nl/9HDL66 -

பாகம் 6
http://2tag.nl/638U8W -

பாகம் 7
http://2tag.nl/332EK8 -

பாகம் 8
http://2tag.nl/28W8F7 -

பாகம் 9
http://2tag.nl/8H2M4F -

பாகம் 10
http://2tag.nl/829NNH -

பாகம் 11
http://2tag.nl/0V633X -

பாகம் 12
http://2tag.nl/69393M -

பாகம் 13
http://2tag.nl/R1JZ94 -

பாகம் 14
http://2tag.nl/7EHTLC -

பாகம் 15
http://2tag.nl/9FW127 -

பாகம் 16
http://2tag.nl/9B6Y7H -

பாகம் 17
http://2tag.nl/EN35DO -

பாகம் 18
http://2tag.nl/83JD1K -

பாகம் 19
http://2tag.nl/V6YUT3 -

பாகம் 20
http://2tag.nl/0P2WS4 -

பாகம் 21
http://2tag.nl/7E9VSH -

கேணல் சங்கர் நினைவுதொகுப்பு <காணொளி

கேணல் சங்கர் / முகிலன்

வைத்தியலிங்கம்
சொர்ணலிங்கம்
<<வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம்>>
1949 - 26-09-2001


26-09-2001 அன்று வீரகாவியமான கேணல் சங்கர் அவர்களின் மீளும் நினைவுகளில்
தேசியத்தலைவர் அவர்களின் நேர்காணல்


காணொளி

பாகம் 1
http://bit.ly/9yqvMk

பாகம் 2
http://bit.ly/cTAoQp

பாகம் 3
http://bit.ly/cIMTbQ

பாகம் 4
http://bit.ly/992JXr

லெப் கேணல் விக்ரர் நினைவுதொகுப்பு <காணொளி

லெப் கேணல் விக்ரர்

<மருசலீன்
கியூஸ்லஸ்>

பனங்கட்டிக்கொட்டு மன்னார்

<14/11/1963 - 12/10/1986>

லெப் கேணல் விக்டர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் 12/10/2010

மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் விக்ரர் அடம்பனில்
சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல்
களப்பலியானார்

* * * * *

லெப் கேணல் விக்ரர் அவர்களின் , வரலாற்று நினைவுத்தொகுப்பு

காணொளியில் .. . . .

பாகம்1
http://bit.ly/auYmaI

பாகம்2
http://bit.ly/b9FKz9

பாகம்3
http://bit.ly/c4oFZE

முதற்கரும்புலி கப்டன் மில்லர் நினைவுதொகுப்பு <காணொளி

கப்டன் மில்லர்
(1- ஜனவரி-1966 -
05-ஜூலை-1987
கரவெட்டி,
யாழ்ப்பாணம்)
எனும்
இயக்கப்பெயர்
கொண்ட
வல்லிபுரம்
வசந்தன்

தமிழீழ
விடுதலைப்
புலிகளில்
ஒரு முக்கிய
உறுப்பினராக
இருந்தவர்
இவரே முதல்
கரும்புலியாக
05-07-1987 அன்று
யாழ் -
வடமராட்சிக்
கோட்டத்தில்
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலத்தில்
அமைக்கப்பட்டிருந்த
இலங்கைப்
படைத்தளம்
மீதான
தாக்குதலில்
மரணமடைந்தார் .

இவ்நாளே {ஜூலை5}
உலகெங்கும்
பரந்து வாழும்
தமிழ்
உறவுகளால்
கரும்புலிகள்
நாளாக வீரவணக்க
அஞ்சலி செலுத்துகிறார்கள் .

கப்டன் மில்லர்
அவர்களின்
அம்மாவின்
நேர்காணல்

காணொளியில்
http://2tag.nl/VH4A54

* * * * *

முதல்
கரும்புலித்தாக்குதலில்
மில்லருடன்
பங்கெடுத்த
இரு போராளிகளின்
நேர்காணல்
காணொளி

பாகம் 1
http://2tag.nl/2HIY8A

பாகம் 2
http://2tag.nl/522WZ8

நித்திய புன்னகை பிரி.தமிழ்ச்செல்வன் நினைவக கானம்

பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
நினைவக கானம் 01

* * * * *

நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்

தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள் தானைத்தலைவரின் பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே

நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்

நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
பூவிடல் போல உந்தன் புன்னகை போனதா

பேசவந்த பாவியரால் வாசமறந்த சாய்ந்ததுவோ
சாவிரித்த பாவினிலே நீ உறக்கம் கொள்ளுகிறாய்
தலைவனுக்கு என்ன பதில் சொல்லிவிட்டு செல்கிறாய்

தம்பியே தமிழ்ச்செல்வனே தமிழீழத்தை நெஞ்சில்வைத்து தாங்கினாய்
அண்ணன் உயிர்ப்பிள்ளை பகை வீசியகுண்டினம் தூங்கினாய்

நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்

நீ நடந்த
தேசமெல்லாம் நீ
எரிந்து சாகிறாய்
தேசமோ நீநின்ற
ஆசனங்கள்
எரிகிறதே

பாவியர்கள்
காலை வந்து சாவிரித்து போன்றனரே
நாளை இதற்கான
பதில் நம்
தலைவர்
சொல்லுவதே


தம்பியே தமிழ்ச்செல்வனே நீ
சாகவில்லை வாழ்கிறாய்
அண்ணன்
அருகையே நீ
என்றுமே உயிர்வாழ்கிறாய்


நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள்
தானைத்தலைவரின்
பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லு எங்கள்
செல்லமே


நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே
அண்ணன்
உயிர்ப்பிள்ளை

பகை வீசிய
குண்டிலே தூங்குகிறாய்
அண்ணனின்
அருகையே நீ
என்றுமே உயிர்
வாழ்கிறாய்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே


நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்

காணொளியில்

http://bit.ly/bbiVq3

நித்தியவாழ்வினுள் பாலாஅண்ணா நினைவு கானம்

தேசத்தின்குரல்
கலாநிதி
அன்ரன் பாலசிங்கம்
நினைவக கானம்
(04-மார்ச்-1938 - 14-டிசம்பர்-2006)

* * * * *

நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை

நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை

காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி

காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே

நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை

தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் சேர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்
தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் செர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்

வாயடைத்து வாழதனில் வார்த்தை வர இல்லை அய்யா
வந்து உனை காண்பதற்கு இங்கு வழி இல்லை அய்யா

அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ

கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ

அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ

ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்
ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்

பேசவென
வந்தவரின் பொய்
முகத்தை நீ
கிழித்தாய்
பேச்சடங்கி போய்
உறங்கும்
பாய்நிலம் நீ
சிரிப்பாய்

அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ

நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை


காவியமென்
உத்தரவில்
பாலா அண்ணன்
நித்திரையி


கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே

நித்திரையி
கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே


நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை

காணொளியில்

http://bit.ly/9ZEsk7

மேதகு தமிழீழதேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை 2

நீதியும்,

சத்தியமும்
தமிழர் பக்கமாகவே நிற்கின்றன
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி
வேறொன்று மல்ல
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது

* * * * * *


உலகில் மனித உரிமைகள்,
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்த போது
தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது

* * * * * *


தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை
உயர்த்தவில்லை என்பது ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும்
இருக்கிறது

* * * * * *


எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை
அமைத்து வாழவே நாம் விரும்புகின்றோம்

* * * * * *

எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ,
ஒவ்வொரு பக்கத்திலும் ,
எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது

* * * * *
* * * * *

மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்

மேதகு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்

அழிக்க முயல்கிறான்
மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான்

* * * * * *

எதிரி ஈவிரக்கமற்றவன்
போர்வெறி கொண்டவன்
எமது தாயகத்தைச் சிதைத்து
எமது இனத்தை அழித்து விடுவதையே
இலட்சியமாகக் கொண்டவன்

* * * * * *

மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் ,
சுதந்திரச் சிற்பிகள்
எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்

* * * * * *

நாம் இனத்துவேசிகள் அல்லர்
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை

* * * * * *


மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கும் செயலானது
பாரதூரமான பயங்கரவாதச்செயலாகும்
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்கு
சிங்கள பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்

* * * * * *


இறந்து போனோரின் அமைதியைக் கெடுப்பவர்கள்
இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை

* * * * *
* * * * *

மேதகு தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள்

முத்தமிழ் விழாவில் தேசியத்தலைவர் <காணொளி

முத்தமிழ் விழாவில் தேசியத்தலைவர் . . . . . . . . .

1991ல் முத்தமிழ் விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்
நேரடியாக கலந்து சிறப்பித்தார்.

1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள்
முன் தோன்றினார் . அதன் பின்

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின்
மத்தியில் , சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க
இவ்விழாவில் ,

தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு
தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்

காணொளி

பாகம் 1
http://2tag.nl/0DH7WX-

பாகம் 2 .
http://2tag.nl/BW08CN -

பாகம் 3 ,
http://2tag.nl/54KL2X-

2ம் லெப் மாலதி

மன்னார்
ஆட்காட்டி வெளிதனிற்
பிறந்து
மாலதி யென்னும்
பெயர்'தனைத்
தாங்கித்
தன்னிகரில்லாத்
தமிழிச்சி தானெனத்தனையே ஈந்தாள்

தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட
எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர்
அமைப்பினில்
இணைந்து
பன்னுதற் கரியபல
தாக்குதல்
புரிந்தே
பெருமை சேர்த்தனள்
பெண்ணினத்
திற்கே !


குறும்புத்
தனங்கள்
குறைவின்றி ஆற்றும்
கொஞ்சும்
கிளியாய்க்
குலவி நின்றவள்
நிறுவிடத்
துடித்தனள்
தமிழீழம் தனையே
நெஞ்சினில்
நெருப்பினை ஏந்தி நின்றனள்!
இறக்கும்
போதிலும்
ஆயுதங்கள் தம்மை
இன்னுயிர்
அமைப்பிடம்
கொடுத்து மறைந்தனள்!
மறக்க
வியலா முதற்பெண்
புலியாய்
மாவீரர்
பெயர்களில்
மாண்புற
இணைந்தவள்!

அண்ணன் தன்னிடம்
ஐயமறக் கற்ற
ஆயுதப்
பயிற்சியில்
உயரத் திளைத்து
எண்பத் தேழில்
ஐப்பசித்
திங்கள்
இந்திய இராணுவம்
முற்றுகையிடவே
கண்ணெனத்துமுக்கியைக்
கைதனில் ஏந்திக்
களத்தினில்
இறங்கிக் கயவர்
தம்மைப்
பெண்ணெனும்
தெய்வம்
புலியாய்ப்
பாய்ந்து
பெரிதாய்
வீழ்த்தினள்
பெரும்படை தனையே!

தமிழீழத் தேசிய
விடுதலைப்போராட்டத்தின் தக்கவே முதுகெலும்
பெனவே விளங்கும்
அமிழ்தெனத்
திகழும் ஆன்றநல்
அரிவையர்
அவர்தம்
தியாகமும்
வீரமும் ஒருங்கே
இமயமென நாமடைந்த
வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய்
நின்றதை உலகே அறியும்!
சமயத்திற்
தன்னுயிர்
போக்கியே சகாயசீலி
தமிழ்ப்பெண்
போர்ப்பணி தொடர
வைத்தனள் !

அடுப்பங்
கரைதனில்
அகப்பை பிடித்தே
உறங்கிய
பெண்தனை உசுப்பி அழைத்து
எடுப்பாய்
நிமிர்ந்து ஆயுதம்
ஏந்தியே
ஆணுக்கு நிகராய்
அவனியிற் றிகழத்
துடிப்புடன்
அமைப்பினைத்
தொடக்கிய தலைவன்
தூய நெஞ்சினைப்
போற்றுதல்
முறையே !
அடிப்படை உரிமைகள்
மறுத்தோரை எதிர்த்து
அணங்குகள்
படையின்று விரட்டுதல்
காணீர் !
'தாயாய்த்
தங்கையாய்
தாரமாய்
தாதியாய்
தரணியிற்
சேவைகள்
செய்திடப்
பிறந்தவள்'
வாயாரப் பேசிய
வரட்டு வார்த்தைகளை
வர்ணங்கள்
பேசியோர்
வஞ்சனைக்
குரல்களைத்
தீயார
இட்டுமே தீய்ந்திடச்
செய்தார் !


தேன்தமிழ்ப்
பெண்கள்
சிறுமையை எதிர்த்தார்'!
ஓயாத அலைகளில்
அவர்தம் ஆற்றலை
உலகம் வியந்தது !
எதிரியும்
திகைத்தான்.!
பட்டுச் சேலைகள்
பலவகை நகைகள்
பகட்டு வாழ்வுகள்
பயனற்ற வையெனக்
கட்டுப்
பாடுடை வாழ்வுதனைக்
கடைப்பிடித்து
'காண்போம்
தமிழீழம்'
என்கின்ற
கொள்கையில்
கட்டான மனிதகுல
வாழ்வின்
விடிவிற்காய்க்
கன்னியராய்த்
தனிமனித
வாழ்வினை அர்ப்பணித்துச்
சிட்டெனும்
சொல்தவிர்'த்துச்
சிறுத்தையாய்ச்
செயற்படும்
செந்தமிழ்ப்
பெண்களின்
சிறப்பினைச்
செப்பிடுவோம்!

அடிமட்டத்
திலிருந்து எழுப்பிய
அமைப்பின்று
ஆணித் தரமாய்
அகலப் பரந்து
கொடியெனெப்
படர்ந்து உயர்'
அரசியலில்
குற்றமில்
நீதித் துறையில்
நிர்வாகத்தில்
இடியென
முழங்கும் ஊடகத்
துறையில்
இரக்கம் மிகுநல்
மருத்துவப்
பிரிவில்
குடிகளின்
நலந்தனைக்
கருத்திற்
கொண்டுமே
கண்ணுறக்க
மின்றிக்
கடமை செய்கிறதே!
இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு
இறப்பெனும்
முடிவினை வாழ்வினில்
ஏற்றுப்
பத்தரை மாற்றுத்
தங்கமெனத்
திகழ்ந்து
பவ்வியமாய்
விடுதலைக்கு உரம்தனைக்
கொடுத்து
மொத்தத்
தமிழினத்தின்
மனத்திலும்
நிறைந்து
முதலாம் மாவீரப்
பெண்ணென அறிந்து
நித்தமும்
நெஞ்சினில்
நிறை தாமரையாய்
நிறுத்தியே வணங்குவோம்
நாளும்
வாழ்வில் !

பெண்விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி


பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…" தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள். விடுதலைப் போராட்டத்தின் " விழுதுகளுள் ஒன்றாக" உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள். அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1. 15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. 'நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ." தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம். 'என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ." எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner